அவிநாசி, ஜன.23- அவிநாசியில் ஞாயி றன்று காலையில் ஏற்பட்ட கடுமையான பனி மூட்டத் தால் அத்தியாவசிய தேவைக்காக சென்ற வாகன ங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு ஓட்டிச்சென்றனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று வேக மாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரு கின்றனர். மேலும், ஞாயிறுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று (ஜன.23) காலை நேரத்தில் அவிநாசியில் அதிகளவு பணி மூட்டம் ஏற்பட்டதால், அத்தியாவசிய தேவைகளை எடுத்துச் செல்லும் வாகனங் கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின. இதனால் பால், பேப்பர், விநியோகிப்பாளர்கள், கன ரக வாகனங்கள் ஓட்டிகள் வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற னர். மேலும் ஞாயிறன்று சுபமுகூர்த்த தின மான என்பதால் திருமண நிகழ்வுகளுக்கு சென்றவர்களை காவல்துறையினர் விசா ரித்து, திருமணச் சான்றிதழ் காண்பித்த பிறகு வாகனங்களை செல்ல அனுமதித்த னர்.