தருமபுரி, ஜூன் 6- ஒகேனக்கல்லில் பரிசல் பயணத் திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அரசு விதித்த கட்டணம் தவிர்த்து கூடு தல் தொகையை பரிசல் ஓட்டிகள் வசூல் செய்கின்றனர். இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அருவியின் பாதை யில் பரிசல் பயணம் செல்வது சுற்றுலாப்பயணிகளுக்கு பெரும் ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் பரிசல் பயணத்திற்கு அரசின் சார்பில் ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில், 150 ரூபாய் அரசுக்கு, 600 ரூபாய் பரிசல் ஓட்டுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், சுற்றுலாப் பயணிகள் பரிசல் பயணம் செல்வதற்கு பரிசல் துறையிலிருந்து ஐந்தருவி, மணல்மேடு, மாமரத்து கடவு மற்றும் தண்ணீர் தேக்கம டைந்துள்ள காலங்களில் சின்னாறு பரிசல் துறையி லிருந்து கூத்துக்கள், மெயினருவி, மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பரிசல் பய ணம் செய்பவர்கள் பாதுகாப்பு உடை கட்டாயமாக அணிய வேண்டும் என்று அரசு விதிமுறைகளை வகுத்துள் ளது. இந்நிலையில் தற்போது மேட்டூர் அணை நிரம்பி உள்ளதால், தண்ணீர் தேக்கம் ஒகேனக்கல் வரை இருந்து வருகிறது. இதனால் சின்னாறு பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல், மெயின் அருவி, மணல்மேடு வரை பரிசல் பயணத்திற்கு அனுமதி வழங்கப் பட்டுள்ளது. தற்போது கோடை காலம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் லுக்கு வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் பரிசல் பயணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் அரசு விதித்த கட்டணம் தவிர்த்து கூடுதலாக பணம் பெருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2 ஆயிரம் ரூபாய் வரை பரிசல் பயணத்திற்கு வசூலிக்கப்படுவதாகவும், பரிசலில் நான்கு பேர் மட்டுமே செல்ல வேண்டும் என அரசு கட்டுப்பாடு விதித்து இருக்கிறது. ஆனால் கூடுதலாக பணம் வசூல் செய்து கொண்டு கூடுதல் நபர்களை அழைத்துச்செல்வ தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, ஒகேனக்கல் லில் சுற்றுலா பயணிகளிடம் கூடுதலாக கட்டணம் வசூல் செய்யும் பரிசல் ஓட்டிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டண முறையை ஒழுங்குபடுத்த வேண்டும். பரிசலில் அளவுக்கு அதிகமாக நபர்களை ஏற்றிச் செல் வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சுற்றுலா பயணிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.