districts

திருப்பூர் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நிபுணர் குழு: கே.சுப்பராயன் எம்.பி., கோரிக்கை

திருப்பூர், பிப். 17 - திருப்பூரில் அதிகரிக்கும் கடுமையான போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நிபு ணர் குழு அமைத்து அவர்களின் பரிந்து ரையை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று திருப்பூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் கே.சுப்பராயன் கூறினார். திருப்பூரில் திங்களன்று கே.சுப்பராயன்  எம்.பி. செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதா வது:  தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய  கல்வி நிதி ரூ.2152 கோடியை கொடுக்க முடி யாது. மும்மொழிக் கொள்கையை ஏற்றால் தான் வழங்குவோம் என அவர் மாநிலத்திற்கு  எதிராக போர் பிரகடனம் செய்திருக்கிறார்.  தமிழ்நாடு இதைச் சந்தித்து முறியடிக்கும். ஒரேயொரு கார்டூன் போட்டதற்காக விக டன் இணையப் பக்கத்தை முடக்கியுள்ளது  ஒன்றிய அரசு. சட்டவிரோதமாக குடியேறிய வர்கள் என்று மூன்று விமானங்களில் இந்தி யர்களை அநாகரிகமான முறையில் நாடு  கடத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றி டிரம்பி டம் நேரில் பேசும் போது கூட கண்டிக்கத் துணி வில்லாத மோடி பிரதமர் பதவியில் இருக்கத்  தகுதியற்றவர். கை விலங்கிட்டது தவறு  என்று சொல்ல மோடி மறுப்பது வெட்கக் கேடு. அஞ்சி நடுங்கும் அவருக்கு டிரம்பிடம்  பேசத் தைரியமில்லை. கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பு ஈரோடு மாவட்டம் பர்கூர், கடம்பூர் மலைக ளில் வசிக்கக்கூடிய மலையாளிகள் என்ற பட் டியலின பழங்குடி மக்களுக்கு உரிய சான்றி தழ் வழங்கப்படவில்லை. மற்ற அனைத்து  மாவட்டங்களிலும் வழங்கப்படுகிறது. இது  குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை. அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப் பூர் மாவட்டத்தில் உள்கட்டமைப்பு வசதி களை நிறைவேற்றித் தர ஏற்றுமதி வருமானத் தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்க வேண் டும் என கோரிக்கை வைத்தோம். அதை ஒன் றிய அரசு நிராகரித்து விட்டது. பட்டாவுக்கு சாதகமான முடிவு கடந்த 15ஆம் தேதி திஸா கூட்டத்தில்  திருப்பூர் அண்ணா காலனியில் கலைஞர்  காலத்தில் கட்டப்பட்ட வீடுகளில் சிலருக்குப்  பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. வேறு சிலர்  உள்வாடகைக்குக் குடியிருக்கின்றனர். அவர்களுக்கு பட்டா கொடுக்க வேண்டும்.  பெரிச்சிபாளையம் மாநகராட்சி சுகாதார  ஊழியர் குடியிருப்பில் 55 ஆண்டுகளுக்கு  மேலாகக் குடியிருக்கும் 135க்கும் மேற்பட் டோருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண் டும். பட்டுக்கோட்டையார் நகரில் ஒரு பகுதியி னருக்கு பட்டா கொடுக்கப்படாமல் உள் ளது. அவர்களுக்குப் பட்டா வழங்க வேண் டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத் தேன். சாதகமாக முடிவு செய்யப்படும் என்று  முதல்வர் தெரிவித்திருக்கிறார். நிபுணர் குழு தேவை திருப்பூர் நகரில் போக்குவரத்து நெருக்க டிக்குத் தீர்வு காண நிபுணர் குழு அமைத்து  அவர்கள் பரிந்துரைப்படி நடவடிக்கை எடுக்க  வேண்டும். பல்லடம் ரோடு வீரபாண்டி பிரி வில் இருந்து அவிநாசி ரோடு அம்மாபாளை யம் வரை மேம்பாலம் அமைத்து, வழியில்  குறிப்பிட்ட பகுதிகளில் ஆங்காங்கே  இணைப்புச் சாலை அமைக்க வேண்டும். பல் வேறு பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடு வோர் திருப்பூரில் வந்து பதுங்கிக் கொள்கின் றனர். இந்த முக்கிய பிரச்சனையில் காவல்து றையில் தனிப்பிரிவு ஏற்படுத்தி, குற்றவாளி களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண் டும். கஞ்சா, போதைப் பழக்கம் மிகப்பெரும ளவு இளைய தலைமுறையினரை குட்டி ச்சுவர் ஆக்குகிறது. இதைத் தடுத்து நிறுத்த  வேண்டும் என்று அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப் பினர் எம்.ரவி, மாநகர் மாவட்டச் செயலாளர்  எஸ்.ரவிச்சந்திரன் எம்.சி., புறநகர் மாவட்டச்  செயலாளர் கே.எம்.இசாக், மாநகர துணை  மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.