ஈரோடு, மே 29- ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட் டரங்கில் சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில், பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத் தப்பட்டு வரும், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அலுவலர் கள் மற்றும் சிறுபான்மை யினருடனான ஆய்வு கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்தில் சிறுபான்மை யினர் நலத்துறை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார் பேசியதாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறு பான்மையினர் நலத்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் முன் னேற்ற திட்டங்களான மாவட்ட முஸ் லிம் மகளிர் உதவும் சங்கம், கிறிஸ் துவ மகளிர் உதவும் சங்கம், உல மாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம், வக்பு நலவாரியத்தில் பதிவு பெற்ற உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம், ஜெருசேலம் புனித பயணத்திற் கான நிதியுதவி, கிறித்தவ தேவால யங்கள் பழுது பார்த்தல், கல்வி உத வித் தொகை, டாம்கோ கடன் திட் டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங் கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் விடுதிகளில் தங்கி பயி லும் மாணவ, மாணவியர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திட துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு போட்டித் தேர் விற்கு தயாராகும் வகையில் ரூ.1.25 லட்சம் மதிப்பீட்டிலான பயிற்சி புத்த கங்கள் வழங்கப்பட்டுள்ளன மேலும், நலவிடுதிகளில் தங்கி பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி நூல்கள் வழங்கப்பட் டுள்ளன. மேலும், மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம் மற்றும் சலவை பெட்டிகள் தகுதியுடைய பயனாளிகளுக்கு விரைவில் வழங் கப்படவுள்ளது. கிராமப்புற பெண் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வங்கி கணக்கு துவங்கிட அலுவ லர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என தெரிவித்தார். இதைதொடர்ந்து, தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடன் வழங் கும் திட்டம் மூலம் கடனுதவி பெற்று கடை நடத்தி வரும் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின் போது, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவ லர் ரெங்கநாதன், மாவட்ட கூட்டு றவு சங்கங்களின் இணைப்பதிவா ளர் ராஜ்குமார், மாவட்ட தொழில் மைய மேலாளர் திருமுருகன் உட் பட மாவட்ட முஸ்லிம் மகளிர் உத வும் சங்கம் நிர்வாகிகள், மாவட்ட கிறித்தவ மகளிர் உதவும் சங்கம் நிர்வாகிகள், வக்பு கண்காணிப்பா ளர், உலமாக்கள் உறுப்பினர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் மற்றும் மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.