நாமக்கல், அக்.26- தனியார் காகித ஆலையிலி ருந்து வெளியேறும் கரி தூசியால் பாதிப்பு ஏற்படுவதாக கூறி வியாழ னன்று பொதுமக்கள் சாலை மறி யலில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையத்தில் தனியார் காகித ஆலை இயங்கி வருகிறது. இந்த காகித ஆலையிலிருந்து வெளி யேறும் கரி, தூசியால் சுற்றுவட் டார பகுதியில் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலை யில், இப்பகுதியில் வாழும் மக்க ளுக்கு கண் எரிச்சல், தோல் ஒவ் வாமை, உடல்நல குறைவு உள் ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதா கவும், குடிநீர், உணவிலும் கரி, தூசி ஆகியவை கலப்பதால் அப்பகுதி யில் வசிக்க முடியாத நிலை ஏற்படு வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், புதனன்று காலை வழக்கத்தை காட்டிலும் அதிகளவு கரி,தூசி காகித ஆலை புகை போக்கி வழியாக வெளியே றியுள்ளது. இதனால் ஆவேசம டைந்த பொதுமக்கள், ஓடப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடு பட்டனர். மக்களின் திடீர் போராட்டத் தையடுத்து, தனியார் காகித ஆலை நிர்வாக அதிகாரிகள் போராட்டக்காரர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பல முறை புகார்கள் தெரிவித்தும், உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காகித ஆலை நிர்வாகி களிடம், பொது மக்கள் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, பள்ளி பாளையம் காவல் ஆய்வாளர் சுகு மார் தலைமையில், காவல்துறை யினர் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் கரி,தூசி வராமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததின் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக இரண்டு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி யில் போக்குவரத்து பாதிப்பு ஏற் பட்டது. மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சனை என்பதால் மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரிகள் இதில் உடனடியாக தலையிட வேண்டும். மேலும், மாதந்தோறும் புகைப் போக்கி வழியாக வெளியேறும் கரி தூசி கழிவு குறித்து ஆய்வு மேற் கொள்ள வேண்டும். பொதுமக்கள் நோய் பாதிப்பு இல்லாத வகை யில் வாழ்வதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.