districts

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு

தஞ்சாவூர், மார்ச் 30 - மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு என  பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது:  “தமிழகத்தில் ஆசிரியர்களை மாண வர்கள் மிரட்டும் சம்பவம் குறித்து விசாரிக்கப் பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுக ளாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலை யில், அவர்கள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள் ளதால் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக் கும் கவுன்சிலிங் வழங்க, 44 பொருளாதார பின்தங்கிய பகுதியில் 1,100 ஆசிரியர்கள் நிய மிக்கப்பட்டு, அதற்கான கையேடு வழங்கப்பட் டுள்ளது. ஒரு சில மாணவர்கள், பேருந்து நிற்கும்  போது ஏறாமல், ஓடிச் சென்று ஏறுவதை பழக்க மாக வைத்துள்ளனர். இதை தடுக்கும் வகை யில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மாணவர்க ளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். தமிழகத் தில் சேதமடைந்த அரசுப் பள்ளி கட்டிடங்களை  பொறுத்தவரை தொடக்கப்பள்ளி அளவில் 7  ஆயிரம் பள்ளிகளும், நடுநிலைப்பள்ளி அளவில் 3,030 பள்ளிகளும் என 10,030 பள்ளி  கட்டிடங்களை இடிப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு மாற்றாக 5 ஆண்டுகளில், 18 ஆயிரம் வகுப்பறைகள் கட்டப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக இந்தாண்டு 1,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டு, முக்கியத்துவம் அடிப்படை யில் விரைந்து முதல்கட்ட பணிகள் துவங்கப் பட்டுள்ளன. கடந்த 2012 ஆம் ஆண்டு விதி யின்படி, தனியார் பள்ளி வாகனங்களில், குழந்தைகள் வாகனங்களில் ஏறும் போதும், இறங்கும் போதும் இரண்டு ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். ஆனால் இதில் தவறுகள் நடந்து, விபத்துகள் நேரிட்டால் அதற்கு பள்ளி நிர்வாகம்தான் பொறுப்பு ஏற்க  வேண்டும்.  இதை அந்த தனியார் பள்ளி நிர்வாகம் கடைப்பிடித்திருந்தால், இதுபோன்ற ஒரு  உயிரிழப்பு ஏற்பட்டிருக்காது. இதுகுறித்து ஏப்.4 ஆம் தேதி நடைபெறும் முதன்மை கல்வி  அலுவலர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது”. இவ்வாறு அமைச்சர் கூறினார்.