districts

img

குப்பைகளில் தீ வைக்கும் பணியாளர்கள்- பொதுமக்கள் புகார்

தாராபுரம், ஜன.21 - தாராபுரம் நகராட்சி பகுதிகளில் குவியும் குப்பைகளுக்கு பணியாளர் கள் தீ வைப்பதால்  சுற்றுச்சூழல் பாதிக் கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரி வித்துள்ளனர். தாராபுரம் நகராட்சிக்குட்பட்ட 30 வார்டுகளில் உள்ள வீடுகளில் சேரும் குப்பைகளை காலை வேளையில் நக ராட்சி தூய்மை பணியாளர்கள் பெற்று  செல்வார்கள். அவ்வாறு பெற்றுச் செல் லும் குப்பைகளை தரம் பிரித்து அதை  தாராபுரம் நகராட்சி எல்லைக்குட்பட்ட திடக்கழிவு மேலாண்மை மையத்தில் சேர்த்துவிடுவர். ஆனால், தாரா புரம் நகராட்சியில் தூய்மை பணியா ளர்கள் பற்றாக்குறையால், அலங் கியம் ரோடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் அருகிலுள்ள எல்ஜி ஜிஎஸ் காலனி, பீமர்மெயின் வீதி, கீதா நகர், கரூர் மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுவதில்லை.  இதனால் இப்பகுதிகளில் வசிப் போர் குறிப்பிட்ட பகுதிகளில் குப்பை களை கொட்டி வருகின்றனர். இதில் மருத்துவக் கழிவுகளும் அடங்கும். இந்த குப்பைகள் மலைபோல் குவிந்து வரும் நிலையில், அங்கு திரியும் நாய் கள் குப்பைகளை இழுத்து சாலை களில் போடுவதால் அப்பகுதி முழுவ தும் சுகாதார சீர்கேட்டு மையமாக மாறி வருகிறது. இதுகுறித்து நகராட் சியின் கவனத்திற்கு கொண்டு சென் றால், அங்கு வரும் பணியாளர்கள் அந்த குப்பைகளை முறையாக அகற்ற சிரமப்பட்டு, தீ வைத்து விட்டு செல்கின்றனர். இதனால் பல  மணிநேரம் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.  குறிப்பாக, அலங்கியம் ரோடு வரு வாய் ஆய்வாளர் அலுவலகம் அரு கில் உள்ள பகுதியில் தீ வைப்ப தால் அதை கடந்து செல்லும் வாகன  ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளா கின்றனர். மேலும் அங்குள்ள மின்சார டிரான்ஸ்பார்மரில் தீ பிடிக்கும் அபாய மும் உள்ளது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதோடு சற்றுக் கவனக் குறைவு ஏற்பட்டால், பொதுமக்க ளின் உயிருக்கே உலை வைத்துவிடும் என்கிற சூழலே காணப்படுகிறது. ஆகவே, நகராட்சி நிர்வாகம் உடன டியாக தீ வைக்கும் நடவடிக்கையை கைவிட பணியாளர்களுக்கு அறிவு றுத்த வேண்டும்.   மேலும், போதிய பணியாளர் களை நியமித்து அனைத்து பகுதி களுக்கும் சென்று வீடுகளில் சேரும் குப்பைகளை சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக் கள் வலியுறுத்துகின்றனர்.