districts

img

அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் கிராமிய கலைகளையும், கலைஞர்களையும் பயன்படுத்திடுக

உடுமலை, மே 10- அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் கிரா மிய கலைகளையும், கலைஞர்களை யும் பயன்படுத்த வேண்டும் என தமுஎ கச உடுமலை கிளை மாநாட்டில் வலியு றுத்தப்பட்டது.  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் உடுமலை  15 ஆவது கிளை மாநாடு ஞாயிறன்று (மே 8) எஸ்.வி.புரம் தம்புராஜ் கூட்ட அரங்கத்தில், கிளைத்தலைவர் சுதா  சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்றது. இதில் மாநிலக்குழு உறுப்பி னர் கோவை சதாசிவம், மாநிலக்குழு உறுப்பினர் தோழன் ராஜா, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின்  முன்னாள் மாநில பொது செயலாளர் செல்லத்துரை மற்றும் சுபாஜ், சங்கரலிங்கம் உள்ளிட்ட திரளா னோர் கலந்து கொண்டார்கள். இந்த கிளை மாநாட்டில், அரசு நடத் தும் நிகழ்ச்சிகளில் கிராமிய கலை களையும், கலைஞர்களையும் பயன்ப டுத்த வேண்டும். கலை பண்பாட்டுத் துறை வழங்கும் விருதுகளும், உதவிக ளும், தகுந்த கலைஞர்களுக்கும் கிடைத்திட வழிவகை செய்ய வேண் டும். படைப்பாளர்களையும், எழுத்தா ளர்களையும், கதையாசிரியர்களை யும், கலைபண்பாட்டு மையம் கண்ட றிந்து அவர்களை ஊக்குவிக்கும் வித மாக அவர்களது படைப்புகளை அனைத்து நூலகங்களுக்கும் சென்ற டைய தமிழ்நாடு அரசு வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.  முன்னதாக, இம்மாநாட்டில் உடு மலை கிளையின் தலைவராக சுதா சுப்பிரமணியம், செயலாளராக துரை யரசன், பொருளாராக கல்யாண சுந்த ரம், துணை தலைவராக பேச்சியப் பன் பாரதி, திலகவதி, துணை செயலா ளராக ராமசாமி, இளையபாரதி மற்றும்  14 செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்டார்கள்.