districts

img

மின் கட்டண உயர்வா? எங்களால சமாளிக்க முடியாது சாமி…

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்த்துவது என முடிவெடுத்துள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். 50 ரூபாய் முதல் 1130 ரூபாய் வரை இந்த கட்டண உயர்வு இருக்கும் எனவும், ஒன்றிய அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த மின் கட்டண உயர்வு எனவும் தெரிவித்துள்ளார். எது எப்படியோ ஆனால் பாதிக்கப்படப்போவது தமிழக மக்கள்தான். ஏற்கனவே கேஸ் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி என அடிமேல் அடி என்பதைவிட இடிமேல் இடியாய் ஒன்றிய பாஜக அரசு தாக்குதலை தொடுத்து வருகிறது. பதிலுக்கு “நீ என்ன இல்லைன்னு சொல்ல! நான் சொல்றேன் இல்லை!” என்கிற வசனத்தை போல நீ என்ன ஏத்துறது நானும் ஏத்துறேன் என்பதுபோல ஒன்றிய அரசுக்கு போட்டியாக மாநில அரசு இந்த மின் கட்டண உயர்வை அறிவித்துள்ளது.  கட்டண உயர்வு அறிவிப்பு வந்தவுடனே சிறுகுறு தொழில் முனைவோர் துவங்கி இட்லி மாவு அரைத்து விற்கும் பாட்டி வரை குமுறலை வெளிப்படுத்த துவங்கிவிட்டனர்.  இதுகுறித்து பொதுமக்களின் கருத்தை அறிய நமது தீக்கதிர் நிருபர்கள் களத்தில் சேகரித்தவைகள்…

விசைத்தறி மின் கட்டண உயர்வை ரத்து செய்ய கோரிக்கை

தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் என்.கே.எம்.சுரேஷ், செயலாளர் இரா.வேலுச்சாமி, பொருளாளர் கே.பாலசுப்பிரமணியம் ஆகி யோர் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது, விசைத்தறி தொழில் ஏற்கெனவே நலிந்து  உள்ள சூழ்நிலையில் இந்த உயர்வு மிகவும் சிரமத்தில் தள்ளிவிடும். பிற தொழில்களுக்கு குறைவாக உயர்த்தப் பட்டுள்ளபோது (உயர்) அழுத்த மின் இணைப்புகளுக்கு 40 பைசா உயர்வு கடும் நெருக்கடியில் உள்ள விசைத்தறிக ளுக்கு 70 பைசா உயர்த்தி இருப்பது தொழிலை கடுமை யாக பாதிக்கும். எனவே, லட்சக்கணக்கான விசைத்தறி யாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்க  விசைத்தறிக்கான மின் கட்டண உயர்வை ரத்து செய்து தமிழகத்தில் உள்ள ஆறு லட்சம் விசைத்தறி நெசவாளர் களைக் காப்பாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கூலி விசைத்தறியாளர் எதிர்ப்பு

அதேபோல் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினரும் மின் கட்டண உயர்வை ரத்து செய்யுமாறு கோரியுள் ளனர். இதுகுறித்து அவர்கள் செவ்வாயன்று விடுத்துள்ள அறிக்கையில், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி யாளர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாகவே கூலி உயர்வு இல்லை. இதனால் அவர்கள் வாழ்வாதாரமே இல்லா மல் பெரும் போராட்டம் நடத்தியும், அரசு பல கட்டப் பேச்சுவார்்ததை நடத்தியும் அரசு அறிவித்த குறைந்த பட்ச கூலி உயர்வே இன்னும் முழுமையாக அமல்படுத் தாத சூழ்நிலை உள்ளது. இதில் கடந்த ஆறு மாதங்களாக நூல் விலை ஏற்றத்தினாலும் இரண்டு மாதமாக தொழில் முழுமையாக முடங்கிய நிலையில் அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வு கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி யாளர்களுக்கு பேரதிர்ச்சியாகவும், பேரிடியாகவும் உள்ளது. விசைத்தறி தொழில் உள்ள இன்றைய சூழ் நிலையில் மின் கட்டணமே கட்ட முடியாத நிலையில் உள் ளோம்.  குறைந்தபட்ச கூலி உயர்வு பெற்றபோதும் தொழி லாளர்களுக்கு கூலி உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற  காரணத்தாலும் தற்போது உயர்த்தியுல்ள யூனிட்டுக்கு 70 பைசா என்பது இதுவரை இல்லாத உயர்வாகும். கூலி விசைத்தறியாளர்கள் குடும்ப வாழ்வாதாரத்தையும், குடும்பமே உழைக்கும் சூழ்நிலையையும் கருத்தில்  கொண்டுதான் கடந்த காலங்களில் அரசு விசைத்தறி யாளர்களுக்கு என்று தனியாக சிலாப் சிஸ்டத்துடன் தனி கட்டணம் பிரித்து சலுகை வழங்கியது. எனவே எந்த வகை யிலும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் கட்ட முடியாத மின் கட்டண உயர்வை முழுமையாக விலக்கு அளித்து விசைத்தறியாளர் குடும்ப வாழ்வாதாரத்தையும், விசைத் தறி தொழிலையும், தொழி லாளர்களையும் பாதுகாக்க வேண்டும் என இந்த சங் கத்தின் தலைவர் சி.பழ னிச்சாமி கேட்டுக் கொண் டுள்ளார்.

காட்மா கோரிக்கை

குறுந்தொழில் கூடங்க ளுக்கு மின் கட்டண உயர்வில் இருந்து விலக்கு கோருதல் தொடர்பாக கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் மற்றும் ஊரகத் தொழில் முனைவோர் சங்கம் (காட்மா) வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது, கடந்த 18.07.2022 அன்று, தமிழ் நாடு மின்சாரத்துறை அமைச்சர்‌ வி.செந்தில் பாலாஜி, குறுந்தொழில்‌ கூடங்களுக்கான மின்சார உபயோக கட்ட ணம்‌ உயர்த்தப்படும்‌ என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே ஜிஎஸ்டி வரி, கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு, மூலப்பொருள்‌ விலை உயர்வு மற்றும்‌ பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால்‌ பாதிக்கப்பட்டு, குறுந்தொழில்‌ முனைவோர்‌ தங்கள்‌ தொழிலை தொடர்ந்து நடத்த கடு மையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்‌. இந் நிலையில்,  மின்சார  உபயோக கட்டணம்‌ உயர்த்தப்படும்‌ என்ற அறிவிப்பு அவர்களை மேலும், நெருக்கடியில்‌ தள் ளும்‌ விதமாக அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு முதல்வர், குறுந்தொழில்‌ முனை வோர்களின்‌ சிரமங்களை கருத்திற்கொண்டு, மின்‌ கட்டண உயர்விலிருந்து குறுந்தொழிற்‌ கூடங்களுக்கு விலக்கு  அளித்து, குறுந்தொழில்‌ முனைவோரையும்‌, அவர்களை நம்பி இருக்கின்ற லட்சக்கணக்கான தொழிலாளர்களின்‌ வாழ்வாதாரங்களையும்‌, பாதுகாத்து உதவும்‌ வகையில்‌ மின்‌ கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.