districts

img

சாலையோர வியாபாரிகள் விற்பனைக்குழு தேர்தல்

மேட்டுப்பாளையம், ஆக.3- மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் விற்பனைக் குழு தேர்தலில், சிஐடியுவினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர கடைகளை முறைப்படுத் தவும், அதற்காக நகர விற்பனைக்கு ழுவை உருவாக்கவும் முடிவு செய்யப் பட்டது. அதன்படி, 848 சிறு வியாபாரிக ளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட் டன. மேலும், விற்பனைக்குழு பிரதி நிதிகளாக ஆறு பேரை தேர்வு செய்ய மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவல கத்தில் ஆக.14 ஆம் தேதியன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்த லில் போட்டிடும் வேட்பாளர்களிடம் இருந்து வேட்புமனுக்கள் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை பெறப்படும் என நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. வேட் புமனு தாக்கல் செய்யும் இறுதி நாளான வெள்ளியன்று சிஐடியு சாலையோர சிறு வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் அப்துல் சமது, ஆனந்தி, கனகமணி, ரங்கநாதன், யாசர் அராபத், சலீம் ஆகிய 6 பேர், ரூ.2 ஆயிரம் வைப்புத்தொகை செலுத்தி நகராட்சி அதிகாரியிடம் வேட்புமனுவை வழங்கினர். வேட்பு மனு பரிசீலனை வரும் திங்களன்று (நாளை) நடைபெறும். வேட்புமனு திரும்ப பெரும் நாள் மற்றும் இறுதிப்பட் டியல் வரும் செவ்வாயன்று வெளியி டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.