districts

img

10 நாட்களாக குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்

தாராபுரம்,  ஜூன் 30-  தாராபுரம் நகராட்சி பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடு பட்டனர். நகராட்சி நிர்வாகமும், காவல்துறை யும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதில் உடன் பாடு ஏற்பட்டதையடுத்து சாலை மறியல் ஒரு  மணிநேரத்திற்குப் பிறகு விலக்கிக் கொள்ளப் பட்டது .  தாராபுரம் நகராட்சி 4 வார்டுக்கு உட்பட்ட  பகுதிகளில் பிரதானம் குடிநீர் பைப்பில் உடைப்பு ஏற்பட்டதால் கடந்த 10 நாட்க ளாக உடைப்பைச் சரிசெய்யும் பணி நடை பெற்று வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த  வாரம் இரண்டு நாட்கள் மட்டும் லாரிகள்  மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட் டது. அதன்பிறகு குடிநீர் விநியோகம் நடைபெ றவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் சார் பில் நகராட்சி நிர்வாகத்திற்குத் தகவல் அளிக் கப்பட்டும் எந்த நடவடிக்கை எடுக்கப்பட வில்லை. இதையடுத்து, தாராபுரம் பூளவாடி  பிரதானம் சாலையில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  தாராபுரம் பூளவாடி சாலை பள்ளி, கல்லூரி  வாகனங்கள் செல்லும் முக்கிய பகுதி  என்பதால் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. தகவலறிந்து காவல் துறையும், நகராட்சி குடிநீர் விநியோக பிரிவு  அதிகாரிகளும் மறியலில் ஈடுபட்ட பொதுமக் களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்குள் குடிநீர் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்டு குழாய் மூலம் குடிநீர் வினியோகம் மேற்கொள்ளப்படும் என உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக் கள் சாலை மறியலை விலக்கிக் கொண்ட னர்.