ஈரோடு, டிச.20- தமிழ்நாடு மருந்து மற்றும் விற் பனைப் பிரதிநிதிகள் சங்கத்தின் சார் பில் ஈரோட்டில் புதனன்று ஒருநாள் வேலை நிறுத்தம் நடைபெற்றது. குறைந்தபட்ச ஊதியம், 8 மணி நேர வேலை, நிறுவன வாரியாக உறுப்பினர் குறைதீர்க்க குழு அமைப்பு, சட்ட உரி மைகளை அமல்படுத்துதல் போன்ற உரிமைகளை வழங்க வேண்டும். மருந்து மற்றும் மருத்துவ உபகரணங் களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். அத்தியாவசிய மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். பொதுத்துறை மருந்து நிறு வனங்களை புனரமைக்க வேண் டும். தொழில் நுட்பத்தை பயன்படுத்து வதாகக் கூறி, மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளை கடுமையாக வாட்டி வதைப்பதை மருந்து நிறுவனங்கள் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி ஈரோடு, சூரம் பட்டி நால் ரோட்டில் தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனைப் பிரதிநிதிகள் சங்கத் தினர் ஒருநாள் வேலை நிறுத்த ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்திற்கு, சங்கத்தின் தலைவர் சுரேஷ்பாபு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி செயலாளர் மு.சங்கரன் பேசினார். சிஐடியு மாவட்ட உதவித்தலைவர் என்.முருகையா வாழ்த்தி பேசினார். சங்கத்தின் மாநி லத் துணை பொதுச்செயலாளர் எஸ். நாராயணசாமி உள்ளிட்ட திரளான மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதி கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட னர். பொருளாளர் டி.கோபிநாத் நன்றி கூறினார்.