districts

img

வட்டமலைக்கரை ஓடையில் தூர்வாரும் பணி 25 ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் விட ஏற்பாடு

திருப்பூர், பிப்.6- திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட் டத்தில் உள்ள வட்டமலைக்கரை ஓடை  அணையில் இருந்து 25 ஆண்டுக ளுக்கு பிறகு தண்ணீர் பாசனத்துக்குத் திறந்துவிடுவதற்காக ஓடையில் தூர் வாரும் பணி தொடங்கப்பட்டு உள் ளது. வட்டமலைக்கரை ஓடை நீர்த்தேக் கப் பாசனப் பகுதியில் 6 ஆயிரத்து 43 ஏக் கர்பாசன நிலங்கள் பயன் பெறும் வகை யில் இந்த நீர்த்தேக்கத்தின் வலது  மற்றும் இடது பிரதானக் கால்வாய் வழி யாக 145.14 கன அடிக்கு மிகாமல்  பிப்ரவரி 6ஆம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) முதல் தண்ணீர் திறந்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக பிரதான கால்வாய் நீர் பாசன ஓடையில் முட்புதர்கள், களைச் செடிகளை அகற்றி தூர்வாரும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த வட்டமலைக்கரை ஓடை நீர்த்  தேக்கத்தில் இருந்து மார்ச் 23ஆம் தேதி வரை  21 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டமலைக்கரை ஓடை நீர்த் தேக்கத்தில் இருந்து விவசாயப் பாச னத்துக்கு தண்ணீர் திறந்து விட முடிவு செய்யப்பட்டிருப்பது இந்த வட்டார விவசாயிகள் மத்தியில் பெரும் மகிழ்ச் சியை ஏற்படுத்தி உள்ளது.