districts

img

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 1428 பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை

கோவை, டிச.17- கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கோவை  மாவட்டத்தில் 1428 பயனாளிகளுக்கு ரூ.49.98 கோடி மதிப் பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், நாச்சிபாளையம் ஊராட்சியில், கலை ஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டு  வருவதை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு  ஆய்வு மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர்  செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், வீடு இல்லாத ஏழை, எளிய மக்கள் பாதுகாப்புடன் வசிக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு  சார்பில் இலவச வீடுகள் கட்டி வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, “கலைஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின் கீழ்  முதற்கட்டமாக 2024-25ம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி  வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனை வருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தருவதுதான் இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு வீடும் 360 சதுர அடி பரப்பளவில், ரூ.3.50 லட்சம் செலவில்  அமைக்கப்பட்டு வருகின்றது. கலை ஞரின் கனவு இல்லம்“ திட்டத்தின்  கீழ் ஆனைமலை, அன் னூர், காரமடை, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு, எஸ்.எஸ்.குளம்,  சுல்தான்பேட்டை, சூலூர் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி  உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 1428 பயனாளிகளுக்கு  ரூ.49.98 கோடி மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளன, என்றார்.

முன்னதாக, இந்த ஆய்வின்போது நாச்சிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் கே.சசிபிரியா, துணைத்தலைவர் எஸ்.நந்தகுமார், மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.a