நாமக்கல், அக்.7- பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாப்போம், இன்சூரன்ஸ் துறையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன், சேலம் கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் மாநாடு நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் எழுச்சியுடன் துவங்கியது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சேலம் கோட் டத்தின் 33 ஆவது ஆண்டு பொது மாநாடு திருச்செங்கோடு நாடார் திருமண மண்டபத்தில் சனியன்று துவங்கியது. சேலம் கோட்டத்தின் தலைவர் ஆர்.நரசிம்மன் மாநாட்டிற்கு தலைமை ஏற்றார். திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு வரவேற்று உரையாற்றினார். சங்கத்தின் பொதுச்செயலாளர் டி. செந்தில் குமார் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநாட்டை வாழ்த்தி, திருச் செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தென்மண்டல காப் பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் ஆர்.கே. கோபிநாத், தென் மண்டல காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.சிவசுப்பிரமணியன், சென்னை கோட் டம்-2 ன் பொதுச் செயலாளர் ஆர்.சர்வமங்களா, தஞ்சை கோட்ட செயலாளர் செல்வ ராஜ் , வரகூராம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.மணி, ஆண்டிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆதிநாராயணன் ஆகி யோர் வாழ்த்தி உரையாற்றினர். மாநாட்டை நிறைவு செய்து தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் க.சுவாமிநாதன் உரை யாற்றினார். முடிவில், சேலம் கோட்ட பொதுச்செயலாளர் ஆர்.தர்ம லிங்கம் நன்றி கூறினார். முன்னதாக, இந்திய நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் கபளீகரம் செய்ய அனு மதிக்காதே, இன்சூரன்ஸ், வங்கி உள்ளிட்ட துறையில் உள்ள மக்களின் சேமிப்பை தனியார் சூறை யாட அனுமதிக்காதே, பொதுத் துறைகளை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் பேரணி நடை பெற்றது. திருச்செங்கோடு அரசினர் பெண் கள் மேல்நிலைப்பள்ளி அருகில் பேரணியை சென்னை கோட்டம் – 2ன் பொதுச்செயலாளர் ஆர்.சர்வ மங்களா கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். இதில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள எல்ஐசி ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் பேரணியில் பங்கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. ஞாயி றன்று மாநாடு நிறைவு பெறுகிறது.