districts

img

கட்டுமான தொழிலாளிக்கு தீபாவளி போனஸ்

 சேலம், நவ.1- கட்டுமான தொழிலாளி களுக்கு தீபாவளி போனஸ் உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்தில், கட்டுமான நல வாரிய கூட்டம் முடி வின் படி ஓய்வூதியம் ரூபாய் இரண்டாயிரத் திற்கு அரசாணை வெளியிட வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய் வூதியம் வழங்கிட வேண்டும். கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலுயுறுத்தி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மேட்டூர் வட்டாரத் தலைவர் எஸ். ராஜேந் திரன் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி னார். சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி. இளங்கோ, மாவட்டச் செயலாளர் சி.கருப் பண்ணன், தலைவர் சி.மோகன், தமிழ்நாடு  அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி சிங்க ராயன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கட்டுமான தொழிற்சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட எண்ணற்றோர் பங்கேற்றனர்.