கோவை, நவ.17- சிறு வயதிலேயே ஏற்படும் சர்க்கரை நோய் குறித்து விழிப் புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவையில் ஞாயிறன்று வாக்கத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. மரபியல் மற்றும் சில வைரஸ்கள் போன்ற பல்வேறு கார ணிகளால் டைப் ஒன் சர்க்கரை நோய் சிறுவயதிலேயே ஏற்படு கிறது. இத்தகைய சர்க்கரை நோயை குழந்தைப் பரு வத்திலேயே கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்பதை வலியுறுத்தி, தனியார் அமைப்பு சார்பில், ‘கிட் ஏ தான்’ (kid a Thon) எனும் தலைப்பில் கோவை பந்தய சாலை பகுதியில் வாக்கத்தான் நிகழ்ச்சி ஞாயிறன்று நடை பெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் இதனை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று நடைபயணம் மேற் கொண்டனர்.