districts

img

தருமபுரி: தூய்மை பணியாளர்கள் தர்ணா

தருமபுரி, ஜூன் 19- வேலையை வீட்டு நீக்கியதால், தரும புரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென அமர்ந்து தூய்மை பணியாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். பொதுப்பணித்துறை மூலம் ஒப்பந்த அடிப்படையில், ஓம் சக்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு, தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தூய்மை பணி வழங்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டு முதல் மகளிர் சுய உத விக்குழுவை சேர்ந்த 8 பெண்கள், தரும புரி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில்  உள்ள  முதன்மை கட்டடம்,கூடுதல் கட்டடம் மற்றும் அதன் சுற்றுபுற பகுதிகளில் குப்பையை சுத்தம் செய்தல், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல், அலுவலகத் திற்க்குள் கழிவறை சுத்தம் செய்தல், போன்ற  பணிகளை செய்து வந்தனர். இந்த பணிக்கு மாதம் ரூ 7 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. இத னையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரி களிடம் கேட்ட போது உங்களுக்கு இனி மேல் வேலை இல்லை என தெரிவித்துள்ள னர். நான்கு மாத சம்பளமும் வழங்கவில்லை, நாங்கள் இந்த வேலை நம்பி எங்கள் வாழ்க் கையை நடத்தி வருகிறோம், எனவே குடும்ப சூழ்நிலைகருதி எங்களுக்கு மீண்டும் வேலை  வழங்க வேண்டும், என வலியுறுத்தி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தூய்மைப்பணி தொழிலாளர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து பேச்சுவார்த்தைக்கு அழைத்து பேசிய பிறகு, போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.