districts

img

தருமபுரி என்.செல்வராஜ் காலமானார்

தருமபுரி, பிப்.18- தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின்‌ தரும புரி மாவட்ட துணை செயலா ளர் தோழர் என்.செல்வராஜ் காலமானார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க தருமபுரி மாவட்ட தலைவர்களில் ஒருவராக பணியாற்றியவர் என்.செல் வராஜ். பணி ஓய்வுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பாப்பிரெட்டிபட்டி வட்டக்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட துணை செயலாளராகவும் செயல்பட்டு வந்தார். இந்நிலை யில், அண்மையில் ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் சிகிச்சை மேற்கொண்டு வந்த என்.செல்வராஜ் வெள்ளி யன்று அதிகாலை பாப்பிரெட்டிபட்டி வட்டம், பி.பள்ளி பட்டியில் உயிரிழந்தார். இவரின் மறைவை அறிந்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்ட செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல்லிகா, பாப்பிரெட்டிபட்டி வட்டச் செயலாளர் தனுஷன், அரூர் ஒன்றி யச் செயலாளர் பி.குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் டி.மாதை யன் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாநில உதவிச்செய வாளர்  பாபு, மாவட்ட செயலாளர் பி.கிருஷ்ணன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தோர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.