சேலம், டிச.21- ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு ஊராட்சி மன்ற தலைவர்கள் முறைகேடு காரணமாக பதவி பறிக்கப்பட்டுள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றியத்துக் குட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்ற தலைவ ராக கலைச்செல்வி சிவக்குமார் இருந்தார். இந்நிலையில், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு செய்திருப்பதாகவும், அதே போல் ஆட்டுக்கொட்டகை அமைப்பதில் முறைகேடு செய்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சி யின் சார்பில் பலமுறை அரசுக்கு புகார் மனு அளிக்கப்பட்டது. மேலும், பூட்டு போடும் போராட்டம் முதல் காத்திருப்பு போராட்டம் வரை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, புகாரின் பேரில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் விசாரணை நடத்தினார். அதில் முறைகேடு செய்திருப்பது உறுதியானது. இதனையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வியை பதவி நீக்கம் செய்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல, சேலம் மாவட்டம் தலைவா சல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தேவி யாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர் அமுதா. இவர் தவறான ஊராட்சி தீர்மானங்களை நிறைவேற்றி, வேலை உத் தரவு வழங்காமல் மூன்று பணிகளை ஒப்பந் ததாரர்கள் மேற்கொள்ள அனுமதித்துள் ளார். மேலும், தனது கணவரை ஊராட்சி மன்ற செயல்பாடுகளில் சுதந்திரமாக செயல்பட அனுமதித்துள்ளார். அமுதா மற்றும் அவரின் கணவர் ஆகியோர் அதே ஊராட்சியைச் சேர்ந்த ஒப்பந்ததாரரிடம் திட்டப்பணிகளை மேற்கொள்ள பணத்தை கையூட்டாக பெற்ற தாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது குற்றவியல் வழக்கு தொட ரப்பட்டுள்ள காரணங்களுக்காக, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 2621 ஊராட்சி ஆய்வாளர், மாவட்ட ஆட்சியருக்கு அளிக் கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, தேவியாக்குறிச்சி ஊராட்சி மன்ற தலை வர் அமுதா என்பவரை பதவிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி நிர்வாக நலனை கருத்தில் கொண்டு, இந்த இரண்டு பேரும் ஊராட்சி மன்ற தலைவர்களாக தொடர்ந்து செயல்பட்டால், தங்களது அதிகா ரத்தை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்ப தால் இந்த அதிரடியான முடிவை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எடுத்துள்ளதாக கூறப் படுகிறது.