ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், செயற்குழு உறுப்பினர்கள் சி.துரைசாமி, ஏ.எம்.முனுசாமி, பி.பி.பழனிச்சாமி, பி.மாரிமுத்து, சி.பரமசிவம், ஜி.பழனிசாமி, கே.ஆர்.விஜயராகவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள், தாலுகா செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.