திருப்பூர் ஜூலை 27 - மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய பாரதிய ஜனதா அரசை கண்டித்து காங்கேயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கேயம் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பி.வேலுச்சாமி தலைமை வகித்தார். இதில் கலவரத்தை கட்டுப்படுத்தவும் மத வாத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் இழிவான அரசியலை பாரதிய ஜனதா கட்சி கைவிடவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் கே திருவேங்க டசாமி, தாலுகா குழு உறுப்பினர் எஸ். தங்கவேல், நத்தக்கா டையூர் செயலாளர் செல்வராஜ், நகரக் கிளை செயலாளர் ராமநாதன், மூத்த உறுப்பினர் குமாரசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணியினர் திரளானோர் கலந்து கொண்டனர்.