கோவை, பிப்.9- தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதியினரை கைது செய்யக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை மாவட்டம், சுல்தான் பேட்டையை அடுத்த பொன்னா கானி என்ற பகுதியை சேர்ந்த லட்சுமி என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சாதியை சார்ந்த 20க்கும் மேற்பட்டோர் சாதி பெயரை கூறி தகாத வார்த்தைகளால் திட்டி தாக் குதல் நடந்தி உள்ளனர். இது குறித்து வன்கொடுமை தடுப்பு சட் டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட் டும், இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆகவே, குற் றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாதிக்கப்பட்ட பெண்ணான லட் சுமி புதனன்று கோவை மாவட்ட அனைத்து முற்போக்கு இயக்க நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த னர். முன்னதாக, மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தின் முன்பாக கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் தமிழர் கட்சியின் தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், திராவிட விடுதலைக் கழக நிர்வாகி நேரு தாஸ் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.