உடுமலை, ஜன.20- குடியரசு தின விழா அணிவகுப் பில் தமிழக அரசின் அலங்கார வாக னங்களுக்கு அனுமதி மறுத்த ஒன்றிய மோடி அரசுக்குக் கண்டனம் தெரி வித்து வியாழனன்று உடுமலையில் மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சுதந்திரப் போராட்ட தலைவர்க ளான வீரமங்கை வேலுநாச்சியார், கப் பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார் மற்றும் மருது சகோதரர்களின் சிலைகள் கொண்ட வாகனத்தை தலைநகர் தில்லியில் குடி யரசு தின விழாவில் பங்கேற்க ஒன் றிய மோடி அரசு அனுமதி வழங்க மறுத் துள்ளது. இதைக் கண்டித்து மதச் சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் சார்பில் உடுமலை மத்திய பேருந்து நிலை யம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உடுமலை தாலூக்கா செயலாளர் ரணதேவ் தலைமை தாங்கினார். இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் ரவி, ஒன்றிய கவுன்சிலர் குருவம் மாள் செளந்திராஜன், மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் உடுமலை நகர செயலாளர் தண்டபாணி, நகரக்குழு உறுப்பினர்கள் தோழன்ராஜா, வசந்தி, மோட்டார் சங்கத்தின் சுதா சுப்பிர மணியன், சக்திவேல், காங்கிரஸ் கட்சி யின் நகரத் தலைவர் ரவி, மாவட்ட கவுன்சிலர் ஜனர்த்தனன், முத்துகு மார், திமுக சார்பில் கருணாகரன், மதி முக சார்பில் ராம்தாஸ் உள்ளிட்ட கூட் டணி கட்சியினர் கலந்து பலர் கொண் டனர்.