நாமக்கல், டிச.29- நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பிய நூற்றுக்கும் மேற்பட்ட எம்பிக்களை சஸ்பெண்ட் செய்யப்பட் டதை கண்டித்து, நாமக்கல்லில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கேள்வி எழுப் பிய எதிர்கட்சியை சார்ந்த 146 உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்து வரலாற்றில் கரும்புள்ளியை பாஜக ஏற்படுத்தியுள் ளது. இதற்கெதிராக நாடு முழுவதும் ஜனநாயக அமைப்பு கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதன்தொடர்ச்சி யாக “ஜனநாயகத்தை பாதுகாப்போம்” என்ற முழக்கத்தை முன்வைத்து, இந்திய மாணவர் சங்கத்தினர் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலை வர் மு.தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில், மாவட்டச் செயலாளர் தே.சரவணன், மாநிலக்குழு உறுப் பினர் ராமகிருஷ்ணன், மாவட்ட நிர்வாகிகள் தனுஷ், சதீஷ் குமார், விஜயலட்சுமி, சுகவனேஷ் சட்டக் கல்லூரி ஒருங் கிணைப்பாளர் வேல்முருகன் உள்ளிட்ட திராளனோர் பங் கேற்றனர். முடிவில், பிரியதர்ஷினி நன்றி கூறினார்.