districts

img

பெண்கள் பிரச்சனைகளை தீர்க்க கோரி திருப்பூரில் ஜனநாயக மாதர் சங்கம் பிரச்சாரம்

திருப்பூர், பிப். 20 - தமிழகத்தில் பெண்கள், குழந்தைக ளுக்கு எதிராக அதிகரித்து வரும் வன்மு றையை கட்டுப்படுத்தவும், சட்டப் பேரவை சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி இப்பிரச்சனையை விவாதிக்கவும் வலி யுறுத்தி திருப்பூரில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் பிரச்சாரம்  நடத்தினர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுக ளாக பெண்கள், குழந்தைகளுக்கு எதி ராக அதிகரித்துள்ள வன்முறைகளை தடுத்து நிறுத்தவும், தமிழக அரசு உரு வாக்கியுள்ள பெண்கள் கொள்கையை அமலாக்கவும், பணியிடங்கள், கல்வி  நிறுவனங்கள், பொதுப் போக்குவரத்து  வாகனங்களில் பெண்களுக்கு, குழந் தைகளுக்கு எதிராக நடத்தப்படும் அத் துமீறல், வன்கொடுமைகளை தடுத்து நிறுத்தவும், இப்பிரச்சனைகள் குறித்து தமிழக சட்டப் பேரவை சிறப்புக்  கூட்டத்தை நடத்தவும் வலியுறுத்தி பிப்ர வரி 28ஆம் தேதி அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கத்தின் சார்பில் சென்னை  தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணி நடத்தப்படுகிறது. இப்பேரணியை விளக்கி தெருமு னைப் பிரச்சார இயக்கத்தை மாதர்  சங்கத்தினர் நடத்தினர். திருப்பூரில் தியாகி குமரன் சிலை முன்பாக வியாழக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டு பிரச்சாரம் மேற்கொண்டனர். மாதர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவர் பா.லட்சுமி தலைமை ஏற்றார். அவிநாசி ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.செல்வி, மாவட் டச் செயலாளர் சி.பானுமதி, மாவட்டத் தலைவர் எஸ்.பவித்ராதேவி ஆகி யோர் பெண்கள் பிரச்சனைகள் குறித்து  உரையாற்றினர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாதர் சங்க நிர்வாகிகள், ஊழியர்கள் பங்கேற் றனர். நிறைவாக ஊத்துக்குளி தாலுகா செயலாளர் சி.வண்ணக்கொடி நன்றி கூறினார்.