உடுமலை, பிப்.28- பஞ்சாலை தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.26 ஆயிரம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என உடுமலை மத்திய பேருந்து நிலையத்தின் முன்பு செவ்வாயன்று சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைக் கப்பட்டது. சிஐடியு பஞ்சாலைச் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.செல்வ ராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், பஞ்சாலை தொழிலாளர் களுக்கு குறைந்த பட்ச கூலியை நிர் ணயம் செய்ய வேண்டும். தொழிலா ளர்களுக்கு மாதம் ரூபாய் 26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும். தொழிலாளர் சட்ட தொகுப்பு நான்கையும் திரும்ப பெற வேண்டும். பஞ்சாலைகளில் பணிபு ரியும் பயிற்சியாளர்களுக்கு தினசரி ஊதியமாக ரூ.512 வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு நடைமுறைப்ப டுத்த வேண்டும். மேலும், மற்ற தொழி லாளருக்கு ரூபாய் ஆயிரம் வழங்க வேண்டும்.ளுக்கு இ.எஸ்.ஐ திட்டத் தின் மூலம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மூத்த குடிமக் களுக்கு பறிக்கப்பட்ட ரெயில் கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பது உள் ளிட்ட 7 அம்ச கோரிக்கையை ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் நிறை வேற்ற வேண்டும் என்ற கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டச் செய லாளர் கே.ரங்கராஜ், பஞ்சாலை சங் கத்தின் மாவட்டத் தலைவர் கே.பழனி சாமி, மாவட்ட பொதுச் செயலாளர் சி.ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட பொருளா ளர் எஸ்.ஜெயபிரகாஷ் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உடு மலை நகரச் செயலாளர் தண்டபாணி உட்பட திரளான பஞ்சாலை தொழி லாளர்கள் கலந்து கொண்டார்கள்.