தருமபுரி, பிப்.28- உக்ரைன் நாட்டில் படித்து வரும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களை தாய்நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாணவர்களின் பெற்றோர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த னர். தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டியில் வசித்து வருப வர் மாதையன். இவரது மகன் லோகநாதன், உக்ரைன் நாட்டில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிப்பு படித்து வருகிறார். அதேபோல், அரூர் வட்டம், நாசன்கொட்டாய் பகுதியில் வசித்து வரும் தமிழ்குமரனின் மகள் கவிநிலவு என்பவரும், இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வரு கிறார். தற்போது உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவ டிக்கை மேற்கொண்டு வருவதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. எனவே, உக்ரைன் நாட்டில் கல்வி பயின்று வரும் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மாணவர் கள், தாயகத்திற்கு திரும்ப அழைத்து வர தமிழக அரசும், ஒன்றிய அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலி யுறுத்தி அம்மாணவர்களின் பெற்றோர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.