districts

பொதுவழியை மறிக்கும் தனியார் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

திருப்பூர், டிச.28- திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், ரங்கம்பாளையம் ஆதி திராவிடர் காலனியில் குடியிருக் கும் மக்களுக்கு உரிய பொது வழியை மறிக்கும் தனியார் ஆக்கி ரமிப்பை அகற்றி பாதையை உறு திப்படுத்தித் தர அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை  மனு அளித்தனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியர கத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத்திடம் திங்களன்று இப்பகுதி மக்கள் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது: கடந்த பதினேழு ஆண்டுகளுக்கு முன்பாக அரசால் 20 குடும்பங்களுக்கு பட்டா வழங் கப்பட்டுள்ளது. அந்த இடங்களில்  தற்பொழுது அனைவரும் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.  தாழ்த் தப்பட்ட வகுப்புகளை சேர்ந்த மக் கள் வசிக்கும்  இந்த காலனியில் அதே வகுப்பை சேர்ந்த நான்கு  நபர்கள் சேர்ந்து அரசால் கொடுக் கப்பட்ட பொதுவழி பாதையை ஆக்கிரமித்து உள்ளனர். அந்த  பொது வழி பாதையை ஆக்கி ரமிப்பு செய்துள்ளவர்கள் மீது  நட வடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பை அகற்றி தரும்படி பொதுமக்கள் கைக்குழந்தைகளுடன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தனர். 

கனரா வங்கி வணிகத் தொடர்பாளர்கள் மனு 

திருப்பூர் மாவட்டத்தின் முன் னோடி வங்கியாக உள்ள கனரா வங்கி கிளைகளில் மட்டும் 70  வணிக தொடர்பாளர்கள் பணி யாற்றி வருகின்றனர். முதியோர் உதவித்தொகை விநியோகம் செய்தல், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்ட பயனாளிக ளின் ஊதியம் வழங்குதல் உள் ளிட்ட வங்கியின் மூலம் வழங்கப் படும் ஒன்றிய, மாநில அரசுகளின் நலத் திட்டங்களை மக்களின் இருப் பிடத்திற்கே சென்று வழங்குவது அவர்களுடைய பணியாக இருந்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட வங்கி வணிக தொடர்பாளர்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரி டம் கோரிக்கை மனு அளித்தனர். தமிழக அரசின் ஓய்வூதிய பணம்  வழங்க அரசு 30 ரூபாய் வங்கிக்கு  வழங்குகிறது, இதில் 20 ரூபாய்  இவர்களுக்கு வழங்க வேண்டும். கொரோனா போன்ற பேரிடர் காலங் களிலும் தொடர்ந்து வங்கி சேவையை வழங்கிய இவர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டும். நீக்கப் பட்ட அடிப்படை ஊதியத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். குறைக்கப்பட்ட பரி வர்த்தனை கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை இதில் வலி யுறுத்தி உள்ளனர்.

அரசு மருத்துவர் மீது புகார்

திருப்பூர் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனையில் பணி யாற்றி வரும் நரம்பியல் மருத்து வர் சிவக்குமார். இவர் குறைந்த ளவு பாதிப்பு உள்ள மாற்றுத் திற னாளிகளுக்கும் 500 ரூபாய் முதல் லஞ்சமாக பெற்றுக் கொண்டு 80 சதவீதம் மாற்றுத்திறனாளி என சான்றிதழ் வழங்குவதாகவும், இதனை கொண்டு இடைத்தரகர் கள் உட்பட பலர் மாற்றுத்திற னாளி உதவித் தொகை பெற்று வரு வதாகவும், இதனால் உண்மை யான மாற்றுத் திறனாளிகள் அர சின் நலத்திட்ட உதவிகளைப் பெற  முடியாமல் பாதிக்கப்படுவதாக வும், அரசுக்கும் இழப்பு ஏற்படுவ தாகவும், எனவே இது குறித்து  விசாரித்து மருத்துவர் சிவக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றுத் திறனா ளிகள் கையெழுத்திட்ட மனுவை ஆட்சியரிடம் வழங்கினர். பெற்றோரை 

பரிதவிக்கவிடும் மகன்

திருப்பூர் மாவட்டம், அவிநாசி  ஆதாரம்பாளையம் பகுதியில் குடி யிருந்து வருபவர் சுப்பிரமணியன்  (78). இவரது மனைவி பூவாத் தாள் (67). இவர்களுக்கு துரை சாமி என்ற மகனும், வசந்தாமணி என்ற மகளும் உள்ளனர். மகன் துரைசாமி 20 ஆண்டுகளாக தங்க ளைக் கவனிக்காமல் இருந்து வரு வதாக பெற்றோர் கூறினர். இவர் களின் மகள் வசந்தாமணி மட்டும் தனது பெற்றோருக்கு ஆதரவாக இருந்துள்ளார். இந்நிலையில் சுப்ரமணிக்கு சொந்தமாக சேவூர்  கூட்டப்பள்ளி பிரிவு அருகே 2 ஏக் கர் நிலம் உள்ளது. தனது காலத் திற்கு பிறகு மகன், மகள் இருவ ருக்கும் தலா ஒரு ஏக்கர் நிலத்தை எழுதி வைத்துள்ளார். ஒரு கோடி  மதிப்புடைய நிலத்தை சகோத ரிக்கு கொடுத்ததால் ஆத்திர மடைந்த மகன் துரைசாமி, புலிப் பார் கிராம நிர்வாக அலுவலராக உள்ள தங்கள் மருமகள் கல்பனா மற்றும் மைத்துனர் நடராஜன் உடன் இணைந்து 10 லட்சம் கடன் வாங்கியதாக போலி ஆவணம் தயார் செய்து, பெற்றோரை மிரட்டி வருவதாக கூறியுள்ளனர். மேலும் நிலத்தில் விவசாயம் செய்யவிடா மல் தினமும் தங்களிடம் சண்டை யிட்டு தொல்லை கொடுத்து வரு வதாகவும், நிலத்தில் வேலை  செய்ய வருவோரை மிரட்டி அனுப்பி விடுவதாகவும், இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டி ருப்பதாகவும் கூறிய முதியோர், தனது மகன் மற்றும் மருமகள் மீது நடவடிக்கை எடுத்து தங்களை காப்பாற்ற வேண்டும் என்று கண் ணீருடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.'

மஞ்சள் பை விழிப்புணர்வு

மஞ்சள் பையை பயன்படுத்து வோம் என்ற பதாகையை ஏந்தி, திருப்பூர் மாவட்டம் பல்லடம் கண பதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8 மற்றும் 6 ஆம் வகுப்பு பயிலும் சகோதரிகள், பனியன் தொழிலாளி மாரிமுத்து என்பவரின் மகள்கள் பிரேமா, உமா இருவரும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சமீபத்தில் தமிழக முதல்வர் அறிவித்த மீண்டும் மஞ்சள் பை என்பதை பின்பற்றும் வகையில்  மஞ்சள் பையை அனை வரும் பயன்படுத்துவோம் என  சகோதரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பதாகையை ஏந்தி வந்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.  சகோதரிகள் இருவரும் இணைந்து திங்களன்று 15 கிலோ மீட்டர் நடை பயணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர்.