திருப்பூர், ஜூன் 2 - திருப்பூர் மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் விவரங்களை சேகரித்து, அதில் குற்றப்பின்னணி உடையவர் களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஊழல் ஒழிப்பு மற் றும் சட்ட பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு குழுவினர் கடந்த செவ் வாய்க்கிழமை திருப்பூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுவில் கூறப்பட்டுள்ள விபரம்: வட மாநில தொழிலாளர்கள் குறைவான ஊதியம் பெற்று, வேறு எந்தப் படிகளும் இல்லா மல், தொழில் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு இல்லாமல், வேலை செய்யத் தயாராக இருப்ப தால் திருப்பூருக்கு வேலை செய்ய அழைத்து வரப்படுகிறார்கள். பல மாநிலங்களில் இருந்து ஆட்களை கூட்டி வரும் இடைத்தர கர்கள் அதிகளவில் உருவாகி இருக்கிறார்கள். இவர்களால் கூட்டி வரப்படும் தொழிலாளர்கள் மற்றும் தானாக வேலை தேடி வரும் தொழிலாளர்கள் என இங்கு இருக்கும் பல லட்சம் தொழிலாளர்களின் விபரங்கள் ஏதும் சேகரித்து பதிவு செய்யப்படு வதில்லை. இவர்களை பணிக்கு அமர்த் தும் தொழில் நிறுவனங்களும், வாடகைக்கு வீடு தரும் வீட்டு உரி மையாளர்களும் இவர்கள் பற்றிய விபரங்களை அறிந்து சேக ரிப்பது இல்லை. கிராமப்புற உள்ளாட்சி மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களிலும் இதற்கான பதிவேடுகள் பராமரிக்கப்படுவது இல்லை. அதிகளவிலான மக்கள் கணக் கில் வராமல் குடியேறி இருக் கும் நிலையில் உள்ளாட்சி அமைப் புகளின் நிர்வாகத்திலும் தேவை யில்லாத சிக்கல்கள், செலவுகள், பணிச் சுமைகள் அதிகரிக்கின் றன. எனவே பிற மாநில தொழிலா ளர்கள் பிரச்சனைகள் குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி நட வடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆட்களை அழைத்து வரும் அனைத்து இடைத் தரகர்களையும் கட்டுப் பாட்டு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் இங்கு நுழையும்போதே ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங் கள் உள்ளிட்ட இடங்களில் பதிவு செய்து கொள்வதற்கு மையங் கள் ஏற்படுத்த வேண்டும். அத்து டன் ஏற்கனவே குடியேறியவர்கள் பற்றிய விவரங்களையும் சேக ரிக்க வேண்டும்.
கிராம உள்ளாட்சி நிர்வாகங் களிலும் வெளி ஆட்கள் நடமாட் டம் குறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். அவர்கள் வேலை செய்யும் நிறுவனம், சுயதொழில் செய்யும் விபரம், குடியிருக்கும் குடியிருப்பு ஆகிய விவரங்களை யும் பதிவு செய்ய வேண்டும். இந்த விபரப் பதிவுகளை இணையதளம், ஆதார் மற்றும் உள்ளூர் காவல்துறையுடன் இணைக்க வேண்டும். பொது பதிவேடு என்பது மாநில, மண்டல மற்றும் மாவட்ட கண்காணிப்பு ஒருங்கிணைந்த பொது அமைப்பாக இருக்க வேண்டும். வேலைக்காக இங்கு வருவோ ரின் குற்றப் பின்னணி குறித்த விபரங்களை ஆரம்ப நிலை யிலேயே கண்டறிந்து அவர்களை திருப்பி அனுப்புவதற்கான திறன் வாய்ந்த செயல்பாட்டு மையங் கள் வேண்டும். இந்த செயல்பாடுகள் அனைத் தும் அரசியலமைப்பு சட்ட விதி களுக்கு உட்பட்டு இந்தியர்கள் அனைவரும் எங்கும் சென்று வர லாம், பணி செய்யலாம், குடியேற லாம் என்ற அடிப்படை சட்ட உரிமைகள் பறி போகாதபடி குற்றப் பின்னணி கொண்டவர் கள் மற்றும் குற்றவாளிகள் தடுக் கப்பட்டு அனைத்து மக்களையும் பாதுகாக்கும் ஏற்பாடாகவே இது அமைய வேண்டும். வருவாய்த்துறை, தொழிலா ளர் நலத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் காவல்துறை ஒருங் கிணைந்து செயல்படுவதற்கான முன்னெடுப்புகள் இப்போது அவ சியமாகிறது. மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் குறிப்பிட்ட தைப் போல வெளிமாநில தொழி லாளர்கள் விபரம் சேகரிக்கப்பட வேண்டும். குற்றப் பின்னணி உடையவர் களை வெளியேற்றி மக்களைப் பாதுகாப்பது அவசியமாகும். இவ் வாறு அதில் கூறப்பட்டு உள் ளது.