districts

மேம்பாலம் கட்டும் வேலையை தீவிரப்படுத்த முடிவு

நாமக்கல், நவ.26- பள்ளிபாளையத்தில் நடைபெறும் மேம்பாலப்பணிகளை தீவிரப்படுத்த நகர்மன்ற தலைவர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  பள்ளிபாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாலம் வேலையை விரைவில் முடிப்பதற்காக நகராட்சி  நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, குடிநீர் வடிவாகல் வாரியம் ஆகிய துறைகளின் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளி பாளையம் நகர்மன்ற தலைவர் மோ. செல்வராஜ், துணைத்தலைவர் ப.பால முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், பள்ளிபாளையம்  நகராட்சி சார் பாக 05.12.2023 முதல் 07.12.2023 மற்றும் 09.12.2023 முதல் 12.12.2023 வரை ஜீவா செட் முதல் காவல் நிலையம் வரை உள்ள குடிநீர் இணைப்புகள் துண்டிக் கப்பட்டு லாரி மூலம் குடிநீர் வழங்கப் படும். மின்சார துறை சார்பாக, பள்ளி பாளையம் பேருந்து நிறுத்தம் சுற்று  வட்டார பகுதியில் 27.11.2023 முதல் வாரத் திற்கு மூன்று நாட்கள் 4 மணி நேரம் காலை 11 மணி முதல் மாலை 3 வரை  மற்றும் 18.01.2024 முதல் 25.01.2024 வரை  ஒரு வார காலம்   இரவு 12 மணி முதல்  அதிகாலை 4 மணி வரை மின் நிறுத்தி  தர வேண்டும் என்றும், போக்குவரத்து துறை சார்பாக 18.01.2024 முதல் 25.01.2024 வரை இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்து தர வேண்டும். 10 சக்க ரங்களுக்கு மேல் உள்ள  கனரக வாக னங்கள் பாலம் வேலை முடியும் வரை  செல்ல அனுமதிக்கக்கூடாது என முடிவு கள் எடுக்கப்பட்டது.