திருப்பூர், ஆக. 3 - திருப்பூரில் மகளிர் சுய உதவிக் குழு கடன் தவணை தொகை ரூ.600 செலுத்தவில்லை என நள்ளிரவு 12 மணிக்கு பெண்களை வீட்டுக்கு செல்ல விடாமல் பிடித்து வைத்த நப ருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாநகராட்சி குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பெண்கள் இணைந்து குழுவாக மகேந்திரா பைனான்ஸில் தலா ரூ.40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளனர். வாரம் 1000 ரூபாய் வீதம் 52 வாரம் செலுத்த வேண்டும் என்ற நிலையில் 28 வாரம் பணம் செலுத்தியுள்ளனர். இந்த நிலையில் 29 ஆவது வாரம் 9 பேர் பணம் செலுத்தி விட்டனர், ஒருவர் உடல்நலம் குன் றியதால் 400 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மகேந்திரா பைனான்ஸில் வசூல் செய்யும் நபர் சிவா னந்தம் என்பவர், அந்த பெண்ணிடம் மீதம் தர வேண்டிய 600 ரூபாய் கொடுக்கவில்லை, அதைக் கொடுத்தால் தான் எல் லோரும் போகலாம் என நடுரோட்டில் இரவு 12 மணிக்கு அவர் களை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உள்ளிட்ட அப்ப குதி மக்கள், வசூல் நபர் சிவானந்தத்தை எச்சரித்து சத்தம் போட்டனர். அதன் பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென் றார்.