கோவை, நவ.2- கனமழையால் நேரு உள்விளை யாட்டு அரங்கத்தை சுற்றியுள்ள கடை களில் மழைநீருடன் கழிவுநீர் புகுந்த தால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் புதனன்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இத னால் கோவையின் பல்வேறு குடியி ருப்பு பகுதிகள் மற்றும் பாலங்க ளுக்கு அடியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே நேரு உள் விளை யாட்டு அரங்க வளாகத்திற்கு வெளி யில் செயல்படும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், கடைகளுக்குள் இருந்த பல லட் சம் மதிப்பிலான பொருட்கள் சேதம டைந்தன. மேலும், மழை பெய்யும் போதெல்லாம் இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கால்வாய் நிரம்பி கழிவுநீருடன் மழைநீரும் சேர்ந்து கடைகளுக் குள் புகுந்து விடுவதாக கடை உரி மையாளர்கள் வேதனையுடன் தெரி வித்துள்ளனர். இதுகுறித்து பாதிக் கப்பட்ட கடை உரிமையாளர்கள் கூறுகையில், இந்த கடைகளுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் மாநகராட் சிக்கு வாடகை செலுத்தி வரும் நிலை யில், தங்களுக்கென கழிவறை வசதி கூட இல்லை. பல நாட்களாக இது போன்ற இன்னல்களை அனுபவித்து வருகிறோம். இதுகுறித்து மாநக ராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வ தில்லை. இனிமேலாவது அதிகாரி கள் இங்கு ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் தேங்காதவாறும், மழைநீர் கடைகளுக்குள் புகாத வண்ணமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆற்றில் பொங்கும் நுரைகள் இதனிடையே ஆத்துப்பாலம் சுண் ணாம்பு கால்வாய், தண்ணீர் செல் லும் பாதையில் மழைநீருடன் சாயப் பட்டறை கழிவுகளும் கலந்து நுரை பெருக்கெடுத்துள்ளது. பல மீட்டர் தொலைவிற்கு வெண்ணிறத்தில் நுரை தேங்கி காணப்படுகின்றன. இதைப்பார்த்து செல்லும் பொதுமக் கள், நீரில் சாய கழிவுநீரை கலந்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி யுள்ளனர்.