districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

மாணவர்களை ஊக்குவிக்க கிரிக்கெட் போட்டி

சேலம், ஜன.9- சேலத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும் டி20 – கிரிக்கெட் லீக் போட்டி கள் புதனன்று (இன்று) தொடங்குகிறது. சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கம் சார்பில்,  அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்குபெறும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் புதனன்று (இன்று) தொடங்குகிறது. மாவட்டத்தில் உள்ள ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை கண்டறிந்து, அவர் களை ஊக்கப்படும் வகையில் இப்போட்டி நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 10 அரசுப்பள்ளிகள், 6 அரசு உதவி பெறும்  பள்ளிகள், 6 சிபிஎஸ்இ பள்ளிகள் மற்றும் 6 மெட்ரிக் பள்ளிகள் என மொத்தமாக 28 பள்ளிகளைச் சேர்ந்த 520 மாணவர்கள் பங்கேற்று விளையாடுகின்றனர். சேலம் சிறுமலர் பள்ளி,  சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கல்லூரி, நீலாம்பாள் சுப்பிரமணியம் பள்ளி மற்றும் இரும்பாலை வித்யாமந்திர் பள்ளி என 4 இடங் களில் போட்டிகள் நடக்கின்றன. அனைவருக்கும் கிரிக்கெட் உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் 66 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு, தனி யாக மேம்படுத்தப்பட்ட பயிற்சி வழங்கப்படும் என சேலம் மாவட்ட மாணவர் கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகிகள் தெரி வித்தனர்.

கந்துவட்டி கொடுமை: திருநங்கை தற்கொலை முயற்சி

சேலம், ஜன.9- வாங்கிய கடனை கட்டச்சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும் கந்துவட்டி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு திருநங்கை ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், செவ்வாய்பேட்டை அருகே உள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை பாவனா (25) என்பவர், செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் ஓடி வந்து, தற்கொலை முயற்சியை தடுத்து நிறுத்தி சமாதானப்படுத்தினர்.  அப்போது பாவனா கூறுகையில், நான் அதேபகுதியில் ஐந்து பேரிடம் சுமார் இரண்டு லட்சம் ரூபாய் கந்து வட்டியில் கடன் பெற்றேன். 20 மாதம் கட்ட வேண்டிய சூழ்நிலையில் 12 மாதம் கட்டியுள்ளேன். கடந்த சில மாதங்களாக கட்ட முடியாத சூழ்நிலையில், கந்துவட்டிக்காரர்கள் என்னை வந்து பணத்தை கட்டச் சொல்லி தொந்தரவு செய்து துன்புறுத்தி, கொலை மிரட்டல் விடுகின்றனர். அனாதையாக இருக்கும் எனக்கு யாரும் உதவி செய்ய முன்வரவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. கொலை செய்து விடுவார்களோ? என்ற அச்சத்தில் நானே எனது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றேன். மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுத்து பணத்தை கட்டச்சொல்லி கொலை மிரட்டல் விடுக்கும் கந்துவட்டி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி சேலம் மாவட்டம், திருவாக்கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செல்வகணபதி - விஜி தம்பதியினர் குடும்ப பிரச்சனை காரணமாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு கவுன்சிலிங்காக வருகை தந்தனர். அப்போது திடீரென மதுபோதையில் இருந்த செல்வகணபதி, முதல் தளத்திலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் சிறு காயங்களுடன் அவர் நல்வாய்ப்பாக உயர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல் துறையினர் செல்வகணபதியை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தொழிற்பள்ளிகள் துவங்க ஆட்சியர் அழைப்பு

சேலம், ஜன.9- 2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறதென சேலம் ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில் கூறியிருப்பதாவது, சேலம் மாவட்டத்தில் 2024 – 2025 ஆம்  கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங் கீகார நீட்டிப்பு, கூடுதல் தொழிற்பிரிவுகள் மற்றும் கூடுதல் அல குகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. ஜன.2 முதல் பிப்.29 ஆம் தேதி வரை www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணை யதளம் மூலமாகவும் மற்றும் மண்டல பயிற்சி இணை இயக்கு நர், சேலம் அலுவலகத்தை நேரிலோ, 0427-2900142 என்ற  தொலைபேசி எண்ணிலோ அல்லது rjdtslm@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சேலத்தில் மினி மாரத்தான்

சேலம், ஜன.9- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், சேலம் மாவட்டத்தில் வியாழனன்று (நாளை) மினி மராத்தான் போட்டி நடைபெற உள்ளது. சேலம் மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, 6 ஆவது தேசிய கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் –  2023யை தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்துகிறது. இப் போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதே சங்களைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விளை யாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஜன.19 முதல் ஜன.31 ஆம் தேதியன்று வரை சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கேலோ இந்தியா விளம்பர வாகனம் வியாழனன்று (நாளை)  சேலம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளது. அதனை யொட்டி, மினி மராத்தான் போட்டி வியாழனன்று காலை 6 மணியளவில் மகாத்மா காந்தி விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. ஆண்களுக்கான 10 கி.மீ போட்டியானது மகாத்மா  காந்தி விளையாட்டரங்கத்திலிருந்து அஸ்தம்பட்டி, கோரி மேடு வழியாக மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் வரையி லும், பெண்களுக்கான 5 கி.மீ போட்டியானது மகாத்மா காந்தி  விளையாட்டரங்கத்திலிருந்து அஸ்தம்பட்டி வழியாக மகாத்மா காந்தி விளையாட்டரங்கம் வரையிலான வழித்தடங் களில் நடத்தப்படும். இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கு வயது வரம்பு இல்லை. இப்போட்டியில் முதல் மூன்று இடங்க ளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்படும். போட்டியில் பங்கு கொள்ள விரும்பு வர்கள் நேரடியாக கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வருவாய் ஆய்வாளர் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு

சேலம், ஜன.9- நகராட்சியில் வீட்டு வரி, குடிநீர் வரி  உள்ளிட்ட மனுக்களுக்கு வருவாய் ஆய் வாளர் லஞ்சம் கேட்பதாக திமுகவைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் குற் றஞ்சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள நரசிங்கபுரம் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இந்நக ராட்சியில் 8 திமுக, 2 காங்கிரஸ், 6 அதி முக, 2 சுயேட்சை உறுப்பினர்கள் உள்ள னர். நகர்மன்ற தலைவராக திமுகவைச் சார்ந்த அலெக்ஸாண்டர் என்பவர் உள் ளார். நரசிங்கபுரம் நகராட்சியில் உள்ள 18 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் குடிநீர், வீட்டு வரி உள்ளிட்டவை கேட்டு மனுக்கள் அளித்திருந்த நிலையில், அதன் மீதான நடவடிக்கை எடுக்கா மல் இழுத்தடிப்பு செய்வதாக நகர்மன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர் கள் குற்றஞ்சாட்டி, நகராட்சி ஆணையர் சம்சுதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். இந்நிலையில், நரசிங்கபுரம் நக ராட்சி, 8 வார்டு உறுப்பினர் புஷ்பாவதி, தனது வார்டுக்குட்பட்ட பகுதியில் வசிக் கும் பொதுமக்கள் குடிநீர், வீட்டு வரி,  பெயர் மாற்றம், உள்ளிட்டவை குறித்து மனு அளித்த நிலையில், 6 மாதங்க ளாக இழுத்தடிப்பு செய்வதாக கூறி, நக ராட்சி வருவாய் ஆய்வாளர் சரவண னிடம் கேட்டுள்ளார். இதனால் இருவ ருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அரசு பல்வேறு திட்டங் களை கொண்டு வந்தாலும் அதிகாரி கள் அலட்சியமாக செயல்படுகின்றனர். குடிநீர், வீட்டு வரி, பெயர் மாற்றம்  உள்ளிட்டவைகளுக்கு பொதுமக்கள் மனு அளித்திருந்த நிலையில், மனுக் கள் மீதான எவ்வித நடவடிக்கை எடுக்கா மல் காலம் தாழ்த்தி வருகின்றனர். பணி களை மேற்கொள்ள 20 ஆயிரம் ரூபாய்  வரை லஞ்சம் கேட்பதாகவும், நகராட்சி பகுதியில் இதுவரை 200க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டிருப்ப தாகவும் திமுகவைச் சேர்ந்த கவுன்சிலர் புஷ்பாவதி தெரிவித்துள்ளார்.

தாட்கோ மூலம் மாணவர்களுக்குத்  திறன் மேம்பாட்டுப் பயிற்சி

திருப்பூர், ஜன.9 - தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன்  மேம்பாட்டு பயிற்சி தாட்கோ வழியாக வழங்கப்படவுள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ் துராஜ் திங்களன்று வெளியிட்டுள்ள செய்தியறிக்கை: பட்ட யப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக் கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரா னிக் முடித்த பட்டியலினம் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப் புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம் பாட்டு பயிற்சி மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன்  மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.  18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக் கலாம். கால அளவு 6 மாதம். இப்பயிற்சியை முழுமையாக  முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவ னத்தால் அங்கீகரிக்கப்பட்ட தரச்சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல் தாட்கோ வழியாக கடைசல் இயந்திரம் இயக்கும்  பயிற்சி வழங்கப்படவுள்ளது. மேலும் 10ஆம் வகுப்பு முடித்த  18 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க லாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் 15 நாட்கள் ஆகும்.  இப்பயிற்சியைப் பெற www.tahdco.com என்ற இணையத ளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்களுக்கான கட்டணத்தைத் தாட்கோ வழங்கும் என மாவட்ட ஆட்சியர்  தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட மேலாளர்  அலுவலகம், தாட்கோ, அறை எண்: 501 (ம) 503, 5ஆவது தளம்,  மாவட்ட ஆட்சியர் வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர்- 641604. தொடர்புக்கு: அலைப்பேசி எண்:94450 29552, தொலை பேசி எண்:0421-297112யை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர் மரணம்: விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

திருப்பூர், ஜன. 9 – திருப்பூர் மாவட்டம் பெருமாநல் லூர் முதல் நிலைக் காவலர் விபத் தில் மரணமடைந்த பிரச்சனை குறித்து பாரபட்சம் இல்லாத முழுமை யான விசாரணை நடத்தி, உரிய நட வடிக்கை எடுப்பதுடன், அவரது குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செய லாளர் செ.முத்துக்கண்ணன் விடுத் துள்ள செய்தியறிக்கையில் கூறியி ருப்பதாவது: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் காவல் நிலையத் தில் வேலை செய்து வந்த முதல் நிலைக் காவலர் அருள்குமார் என்ப வர் கடந்த 5ஆம் தேதி பெருமாநல்லூ ரில் இருந்து, பதிவு எண்: டிஎன் 66  ஏஎம் 1912 பயணிகள் ஆட்டோவில் திருநெல்வேலிக்கு மற்றொரு காவ லர் வெங்கடாசல மூர்த்தி என்பவரு டன் புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அப்போது விருதுநகர் மாவட்டம் சாத் தூர் அருகே சாலைத் தடுப்பில் மோதிய விபத்தில் சிக்கி அருள் குமார்  உயிரிழந்து விட்டார். அவிநாசி துணைக் காவல் கண் காணிப்பாளராக இருந்து சமீபத்தில்  பணியிட மாற்றம் செய்யப்பட்ட பவுல் ராஜின் உறவினருக்காக, திருப்பூரில்  ஆட்டோவை வாங்கி, அதை அவரி டம் ஒப்படைப்பதற்காக நெல்லைக் குச் செல்லும்படி டி.எஸ்.பி.பவுல் ராஜ் கூறியதால், அருள்குமார் ஆட் டோவை ஓட்டிச் சென்றதாக தகவல்  வெளியாகி உள்ளது. காவல் அதிகாரியின் தனிப்பட்ட  சொந்த பணிக்காக, காவலரை அனுப்பி இருந்தால் அது தவறானது.  காவல் துறையில் ஆர்டர்லி என்ற முறையில் உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட சொந்த பணிகளுக்கு காவலர்களை வேலை வாங்கக் கூடாது என்ற கருத்து வலுவாக பரவி  வருகிறது. இந்நிலையில் காவலர் அருள்குமார் உயிரிழப்பு குறித்து பார பட்சம் இல்லாத முழுமையான விசா ரணை நடத்தி உண்மையைக் கண்ட றிய வேண்டும். உயர் அதிகாரியின்  உத்தரவின்பேரில் அவர் ஆட் டோவை ஓட்டிச் சென்று விபத்தில் உயிரிழந்திருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது சட்டப்படி உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். மேலும்  உயிரிழந்த காவலர் அருள்குமா ருக்கு மனைவியும், இரு பெண் குழந் தைகளும் உள்ளனர். எனவே குடும் பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கி,  அவரது இரு குழந்தைகளின் கல்விக் கும் உரிய ஏற்பாடு செய்ய வேண் டும். பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்து அதிகார வர்க்க மனோபாவத்துடன் காவல் துறையினரை உயர் அதிகா ரிகளின் தனிப்பட்ட சொந்தப் பணிக் குப் பயன்படுத்துவதை இனி மேல் முழுமையாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக் குழு சார்பில். மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கூறியுள்ளார்.

தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி

அவிநாசி, ஜன.9- அவிநாசி அரசு கலை அறிவியல் கல் லூரியில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு நிகழ்ச்சி திங்களன்று நடை பெற்றறது. தமிழக அரசின் நான் முதல்வன் திட் டம், தொழில் முனைவோர் மேம்பாடு,  புத்தக்க நிறுவனம் மற்றும் தமிழ்நாடு  திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நடை பெற்றற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரி  முதல்வர் ஜோ.நளதம் தலைமை வகித் தார். வணிகவியல் சர்வதேச வணிகத் துறை தலைவர் செ.பாலமுருகன் முன் னிலை வகித்தார்.  இந்நிகழ்ச்சியில், புதிய தொழில்  மற்றும் பொருள்களை நவீன முறை யில் சந்தைப்படுத்துதல், தொழில்  புதுமைகள், தொழில் முனைவோருக் கான பண்புகள், வாய்ப்புகள் உள்ளிட் டவை குறித்து விளக்கமளிக்கப்பட்டன. இதில், மாணவ, மாணவியர்கள், ஆசிரி யர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றறனர்.  மேலும், பங்கேற்ற மாணவர்களுக்கு  சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.  சர்வதேச வணிகவியல் துறை மாணவி  காயத்ரி நன்றி கூறினார்.

சட்டமன்ற தீர்மானக் குழு தலைவர்: அவிநாசி அரசு மருத்துவமனை ஆய்வு

அவிநாசி,ஜன.9- அவிநாசியில் இரண்டு பகுதிகளில் தமிழக சட்டமன்ற தீர் மானக் குழுவினர் செவ்வாயன்று ஆய்வு மேற் கொண்ட னர். அவிநாசி அரசு மருத்துவமனையில் தாய் சேய் நலப்பிரிவு  கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை தமிழக  சட்டப்பேரவை தீர்மானக் குழு தலைவரும் தமிழக வாழ்வுரி மைக் கட்சியின் நிறுவனமான சட்டமன்ற உறுப்பினர் வேல்மு ருகன் கட்டுமான பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கட்டி டத்தின் தரத்தை சோதித்துப் பார்த்தார். அதேபோல அவசர  சிகிச்சை பிரிவு உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண் டார். இதனைத் தொடர்ந்து அவிநாசி சங்கமன்குளம் ஏரி சீர மைத்தது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மாவட்ட வருவாய் துறை அலுவலர் ஜெய்பீம் உட்பட சட்ட மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், அவிநாசி  பேரூராட்சி தலைவர் தனலட்சுமி பொன்னுச்சாமி பயனடை  கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜன.8- ஒன்றிய அரசே மழையால் பாதிக்கப்பட்ட தமிழகதிற்கு உடனடியாக நிவாரண நிதி வழங்கக் வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் அவிநாசியில் திங்கட்கிழமை ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். அவிநாசி புதிய பேருந்து நிலையம்  அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் அவிநாசி  ஒன்றிய செயலாளர் இரா. முத்துசாமி தலைமை வகித்தார்.  ஒன்றிய துணைச் செயலாளர் வி.கோபால், வழக்குரைஞர் வி. கே.சுப்பிரமணியம், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் ஏ. ஜி. சண்முகம் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள், முகமது யாசின்,  ஆர.ஷாஜகான், என்.செல்வராஜ், ராஜேஸ்வரி, எ.பேபி உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு முகாம்

உதகை, ஜன.9- உதகையில் பழங்குடியின மக்களுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தோடர், கோத்தர், இருளர், குறும்பர், பனியர் மற்றும் காட்டு  நாயக்கர் என 6 வகையான பண்டைய பழங்கு டியின மக்கள் வசித்து வருகின்றனர். பழங் குடியின மக்களுக்கு கல்வி, சட்டம் குறித்த  பல்வேறு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் கூடலூர் சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் மண்வயல் பழங்குடியின மக்க ளுக்கு சட்ட விழிப்புணர்வு முகாம் நடை பெற்றது. இந்த முகாமில் பழங்குடியின மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டால் எந்த  துறைகளை அணுக வேண்டும், என்பது  குறித்து விரிவாக விளக்கம் அளிக்கப் பட்டது. இதேபோல் இந்த முகாமில் பங் கேற்ற பழங்குடியின மக்களுக்கு அடை யாள அட்டை உள்ளிட்ட சான்றிதழ் பெறு வதற்கு தேவையான ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தது. பின்பு பழங்குடி மக் களுக்கு மருத்துவ பரிசோதனை அளிக் கப்பட்டது. இதில் சட்டப்பணிகள் ஆணைக் குழு ஊழியர்கள், வருவாய் மற்றும் சுகாதா ரத்துறையினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜன., 22இல் வாக்காளர் பட்டியல் வெளியீடு

ஈரோடு, ஜன. 9- வாக்காளர் சுருக்க முறை திருத்தம் முடிந்து இறுதி வாக்காளர் பட்டியல் ஜன. 22 ஆம் தேதி அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தர வுப்படி ஜன.1, 2024ஐ தகுதி நாளாகக்  கொண்டு, 18 வயது பூர்த்தி அடைந்தவர் கள் வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ள ஏதுவாக சிறப்பு சுருக்கத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்றத் தொகுதி களிலும், கடந்த நவம்பர் மாதத்தில் சிறப்பு முகாம் நடத்தி, பொது மக்களிடமிருந்து படிவங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட படி வங்களை ஆய்வு செய்து, வாக்காளர் சுருக்க  முறை திருத்தம் முடிந்து,  இறுதி வாக்கா ளர் பட்டியல் ஜன.5 ஆம் தேதியன்று வெளியிடப்படும். ஆனால் தேர்தல் ஆணைய  அட்டவணையில் வாக்காளர் பட்டியலில்  இறுதி வெளியீடு நாள் மாற்றி அமைக் கப்பட்டதால், ஜன. 22 ஆம் தேதியன்று வெளி யிடப்படும் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலு வலர் தெரிவித்துள்ளார்.

தப்பியோடிய கைதிகள் மீண்டும் கைது

கோபி, ஜன.9-  கோபிசெட்டிபாளையம் அருகே திருட்டு  வழக்கில் கைதாகி, பின்னர் தப்பியோடிய குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை யம் அருகே உள்ள சிங்கிரிபாளையம் பகுதி யில் உள்ள கோவில் உண்டியலில் கொள்ளை யடித்த வழக்கில், சேது மற்றும் அஜீத் ஆகிய  இரண்டு குற்றவாளிகளை காவல்துறை யினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் படி, கோபி மாவட்ட சிறையில் அடைத்த னர். இதனைத்தொடர்ந்து, சிறுவலூர் காவல் நிலையப் பகுதியில் நடைபெற்ற மற்றோரு கோவில் உண்டியல் கொள்ளை வழக்கில் தொடர்பு இருப்பதாக, குற்றவாளிகளான சேது, அஜித் மற்றும் பரணி ஆகிய மூவரை, விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர். அங்கு மூவரிடமும் விசாரணை நடத்தியதை அடுத்து, மூவரையும் கோபி குற்றவியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, மீண்டும் சிறைக்கு கொண்டு செல்ல முற் பட்டனர்.  அதற்கு முன்னதாக, மூன்று கைதிக ளுக்கும் போலீசார் உணவு வாங்கிக்  கொடுத்ததாக கூறப்படுகிறது. உணவினை அருந்தி விட்டு கைக்கழுவும் நேரத்தில், சேது வும், அஜித்தும் போலீசார் பிடியில் இருந்து  ஆளுக்கு ஒரு திசையில் தப்பியோ டியுள்ளனர். இதைத்தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பி ஓடிய 2 குற்ற வாளிகளை பிடிக்க காவல்துறை துணை கண்காணிப்பாளர் தங்கவேலு தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்நிலையில் தப் பியோடி தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளிகள் அஜித் மற்றும் சேது ஆகிய இருவரும், திருப்பூர் மாவட்டம் பெரு மாநல்லூர் அருகே பிடிபட்டனர். இதனை யடுத்து இருவரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனர்.

மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு

ஈரோடு, ஜன. 9- ஈரோடு மாவட்ட நிர்வாகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 175 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வரு கிறது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் மென்ஸ்ட்ரூபீடியா இணைந்து,  மென்ஸ்ட்ரூபீடியா காமிக் புத்தகங்கள் உருவாக்கியுள்ளது. மென்ஸ்ட்ரூபீடியா காமிக் என்பது இளம் பெண்களுக்கு மாதவிடாய் சுகா தாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்ப டுத்த உருவாக்கப்பட்ட ஒரு சிறிய காமிக்  புத்தகம். இது மாணவியர் கட்டாயம் படிக்க வேண்டிய வழிகாட்டி கையேடு ஆகும். குறிப்பாக மலைப்பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் பருவ  வயது பெண்களுக்கு ஆரோக்கிய மான மாதவிடாய் குறித்து இப்புத்த கம் விளக்கிக் கூறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. இப்புத்தகங்களை நூலகத் தில் வைத்து பராமரித்து மாணவியர்க ளுக்கு படிப்பதற்கு வழங்கப்படுகிறது. மாதவிடாய் குறித்த நேர்மறையான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்  மென்ஸ்ட்ரூபீடியா காமிக் கையேடு களை பள்ளி மாணவியர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வாங்கியவருக்கு தண்டனை

உதகை, ஜன.9- கோத்தகிரியில் மின் கம் பத்தை மாற்ற ரூ.4 ஆயிரம்  லஞ்சம் வாங்கிய மின்வாரிய  அதிகாரிக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதித்து உதகை  நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள் ளது. நீலகிரி மாவட்டம், கோத் தகிரியைச் சேர்ந்தவர் ராஜபி ரகாஷ். இவர் அந்த பகுதி யில் விவசாயம் செய்து வரு கிறார். இந்த நிலையில் வீடு  கட்டுவதற்காக இடம் வாங் கிய ராஜபிரகாஷ், அந்த இடத்தில் இருந்த மின் கம் பத்தை இடமாற்றி தருமாறு கோத்தகிரி அருகில் உள்ள  வெஸ்ட் புரூக் மின்வாரிய அலுவலகத்தை அணுகியுள் ளார். ஆனால், ரூ.4000 லஞ் சம் தந்தால் வேலையை முடித்துக் கொடுப்பதாக மின்வாரிய அதிகாரி ஜெய பிரகாஷ் கூறியதாக தெரிகி றது. இதனைத்தொடர்ந்து, ரசாயனம் தடவிய ரூபாயை தரும்போது, லஞ்ச ஒழிப்பு  துறையினர் ஜெயபிரகாசை கையும் களவுமாக பிடித்த னர். இந்த வழக்கு, உதகை சிறப்பு நீதிமன்றத்தில் நடை பெற்று வந்த நிலையில், ஜெயப்பிரகாசுக்கு 4 ஆண்டு கள் சிறை தண்டனையும், ரூ.4000 அபராதமும் விதித்து,  தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாய்க்காலில் கிடந்த பெண் குழந்தை மீட்பு

ஈரோடு, ஜன.9- கீழ்பவானி வாய்க்கால் பகுதியில் பெண் குழந்தை மீட்கப் பட்டு, ஈரோடு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட் டது. ஈரோடு மாவட்டம், வண்டிபாளையம், கீழ்பவானி வாய் கால் கரை பகுதியில் இரண்டரை வயது மதிக்கத்தக்க பெண்  குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள், கடத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த னர். அத்தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு சென்ற  போலீசார், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பணியாளர் களின் உதவியோடு குழந்தையை மீட்டனர். தொடர்ந்து, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்ட குழந்தை, பின்னர் ஈரோடு குழந்தைகள் நலக்குழுவில் ஒப்படைக்கப்பட்டது. இக்குழந்தைக்கு யாரேனும் உரிமை உள்ளவர்கள், தகுந்த ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு  அலுவலரை அணுகி அழைத்துச்செல்லலாம். மேலும், விப ரங்களை அறிய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவல கம், 6-வது தளம் (புதிய கட்டிடம்), மாவட்ட ஆட்சியர் அலுவல கம், ஈரோடு - 638011, தொலைபேசி எண். : 0424-2225010, மின் னஞ்சல் முகவரி : dcpserode2@gmail.com என்ற முகவரி யில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ  கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

மழையால் தேங்காய் வரத்து சரிவு

தருமபுரி, ஜன.9- தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தில் வாரந்தோறும் செவ்வாயன்று சந்தை நடைபெறுவது வழக்கம். அதற்கு முன் னதாக திங்களன்று மதியம் முதல் தேங்காய் சந்தை நடை பெற்றது. இதில் சுமார் 75 ஆயிரம் தேங்காய்களை விற்ப னைக்கு கொண்டு வந்து குவித்தனர். அளவை பொறுத்து ஒரு  தேங்காய் ரூ.8 முதல் ரூ.12 வரை விற்பனையானது. மழை கார ணமாக தேங்காய் வரத்து சரிந்துள்ள நிலையில், விற்பனை யும் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.