சேலம், ஜூன் 30- அன்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சேலம், ஈரோடு மாவட் டங்களின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் அக்னிபாத் என்ற ராணுத்திற்கு ஒப் பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் செயலை கண்டித்து எடப் பாடி தாலுகா இருப்பாளியில் சிபிஎம் கட்சி சார்பில் கண் டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இடைக்குழு உறுப்பினர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.முத்துசாமி, எடப்படாடி தாலுகா செயலாளர் மு.பெரியண்ணன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். இதில் முன்னணி கட்சி உறுப்பினர்கள் எண்ணற்றோர் பங்கேற்றனர். ஈரோடு நகரக்குழுவின் சார்பில் சூரம்பட்டிவலசில் நகரக் குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரி முத்து கலந்து கொண்டார். ஈரோடு ஈரோடு தாலுகா கமிட்டி சார்பில் வெண்டிபாளையம் பகுதி யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வெண்டிபாளையம் கிளை செயலாளர் ஆர்.மாரிமுத்து தலைமை வகித்தார். இதில், மாவட்டக்குழு உறுப்பினர் பி.ராஜா, தாலுக்காக்குழு உறுப்பினர் சி.வீரபாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற் றினார். நசியனூர் பகுதியில், தாலுக்கா கமிட்டி உறுப்பி னர் பி.அன்பு ஜனாதிபதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மூத்த தோழர் நாச்சிமுத்து, தாலுக்கா செய லாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர் பி. லலிதா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மூலப்பாளையத் தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்.பழனிசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுக்கா குழு உறுப்பினர் எம்.சதீஸ்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஈரோடு நகரக்குழுவின் சார்பில் சூரம்பட்டிவலசில் நகரக் குழு உறுப்பினர் எஸ்.ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.மாரி முத்து கலந்து கொண்டார்.