உடுமலை, ஆக.21- உடுமலை நகராட்சி பகுதியில் ஓடை நீர் வழிப்பாதையில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் கோரிக்கை பலகை களை நகரின் முக்கிய வீதிகளில் வைத் துள்ளனர். உடுமலை நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் 60 ஆயிரத்திற்கும் மேற் பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், அரசு அலுவலகம், பள்ளிகள், கல்லூரிகள் என தினமும் பரபரப்பாக இருக்கும் நகரின் நான்கு புறங்களி லும் ஓடைகள் உள்ளன. தற்போது பரு வமழை பெய்து வருகிறது. ஏற்கனவே திருமூர்த்தி அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எனவே உடுமலை நகரில் எல்லை பகு தியில் இருக்கும் தங்கமாள் ஓடை, ராஜ வாய்க்கால் கரைகளை முழுமையாக தூர்வார வேண்டும். அதே போல் உடுமலை பேருந்து நிலையம் செல்லும் கழுத்தறுத்தான் பள் ளத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆக்கி ரமிப்புகள் விரைவாக அகற்றவில்லை என்றால் மழை நீர் குடியிருப்பு பகுதி களுக்கு செல்லும் அபாயம் உள்ளது. உயர் நீதிமன்ற ஆணைப்படி உடுமலை நகராட்சி நிர்வாகம் கழுத்தறுத்தான் பள் ளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்து உள்ளது. மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் கோரிக்கை பலகை களை நகரின் முக்கிய வீதிகளில் வைத்துள்ளார்கள்.