districts

img

கூலிபாளையத்தில் ரயில்கள் நிறுத்தி செல்ல திருப்பூர் எம்.பி.யிடம் சிபிஎம் நேரில் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 30– திருப்பூரை அடுத்த கூலிபாளையம் ரயில் நிலையத்தில் பயணிகள் ரயில்களை நிறுத்திச் செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் வடக்கு ஒன்றிய  நிர்வாகிகள் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன் வியாழக்கிழமை காலை திருப்பூர் எம்.பி.  கே.சுப்பராயன் அலுவலகத்தில் அவரை நேரில்  சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். இம்மனு வில் கூறப்பட்டு இருப்பதாவது: தொழில் நகரமான திருப்பூர் மிகப்பெரும் போக் குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.  நகரின் விரிவாக்கத்திற்கு ஏற்றவாறு போக்குவ ரத்து வழித்தடங்கள் மேம்படுத்தப்படவில்லை. சாலைப் போக்குவரத்தை மட்டுமே திருப்பூர் மாந கரில் பெரும்பகுதி நம்பி இருப்பதும் இதற்கு ஒரு  காரணமாகும். மாற்று ஏற்பாடாக ரயில் பயணத்தை யும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அதிகமாக விடப்பட்டால் திருப்பூர் மாநகரத்தின் ஒரு பகுதி யும், கிராமங்களைச் சார்ந்த ஒரு பகுதி மக்களும் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற  முடியும்.

அதற்கேற்ப திட்டமிட வேண்டும். இந்த பிராந்தியத்தில் ரயில் வழி பயணம் துவங் கியதிலிருந்து கூலிபாளையம் ரயில்நிலையம் செயல்பட்டு வந்தது. கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இந்த ரயில்நிலையம் மூடப்பட்டது. இதற்கு  இங்கு குறைந்த அளவு பயணிகள் வந்து செல் வதை சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் காரணம்  காட்டுகின்றனர்.  திருப்பூர் மாநகர விரிவாக்கம் என்பது தற் போது வேகமாக விரிவடைந்து வந்துள்ளது. கூலி பாளையம், நெட்டகட்டிபாளையம், நல்லகட்டிபா ளையம், வாவிபாளையம், நெருப்பெரிச்சல், தோட்டத்துபாளையம், ஜி.என்.கார்டன், ஜி.எம்.பாலன் நகர், பொம்முநாயக்கன்பாளையம், நல் லாத்தூபாளையம், சேடர்பாளையம், மொரட்டு பாளையம், பாப்பநாயக்கனூர், குருவாயூரப்பன் நகர், படையப்பா நகர், வாரணாசிபாளையம், காளி பாளையம், கணக்கம்பாளையம், சமத்துவபுரம், ராக்கியாகவுண்டன் புதூர், பாரப்பாளையம், குளத்துப்பாளையம், பெரியபாளையம் உள் ளிட்ட இந்த ரயில் நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி களும், ஆங்காங்கு புதிய குடியிருப்பு பகுதிகளும்  உருவாகியிருக்கின்றன.  இந்நிலையில் இப்பகுதிகளில் இருந்து கோவை மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்கள், தனியார் அலுவலகங்க ளுக்கு செல்பவர்கள் குறுகிய நேரத்தில் பொருளா தார இழப்பு இல்லாமல் செல்வதற்கு உகந்ததாக போக்குவரத்து இருக்க வேண்டும். இதற்கு ஏற்க னவே இயங்கி வந்த கூலிபாளையம் ரயில்நிலை யத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது ஒரு  முக்கிய தீர்வாக அமையும்.  

மேலும் திருப்பூர் நகரில் செயல்பட்டுக் கொண் டிருக்கக்கூடிய ரயில் சரக்கு போக்குவரத்துக்கு ஏதுவாக இந்த ரயில் நிலையம் இருக்கும். கூலிபா ளையம் ரயில் நிலையத்தில் இருந்து திருச்சி, பாலக்காடு தேசிய நெடுஞ்சாலை ஏழு கிலோமீட்டர்  தொலைவிலும், கோவை சேலம் தேசிய நெடுஞ் சாலை எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் உள் ளது. சரக்கு போக்குவரத்திற்கும் இந்த இடத்திலி ருந்து மற்ற பகுதிகளுக்கு ஏற்றி செல்வதற்கு உகந்த சுற்றுச்சாலையும் அருகாமையில் உள் ளது. எனவே கடந்த 7 வருடங்களுக்கு முன்பு இயங்கி  வந்த ரயில்களை மீண்டும் கூலிபாளையம் ரயில்  நிலையத்தில் நின்று செல்லும் வகையில் நட வடிக்கை எடுத்திட வேண்டும் என கேட்டுக் கொள் கிறோம். ரயில்கள் வந்து செல்லும் நேரம்: ஈரோடு  முதல் கோவை - காலை 7 மணி, கோவை முதல்  நாகர்கோவில் – காலை 9 மணி, பாலக்காடு முதல்  திருச்சி – காலை 9.30 மணி, திருச்சி முதல் பாலக்காடு  மாலை 4 மணி, கோவை முதல் ஈரோடு    மாலை 7  மணி, நாகர்கோவில் முதல் கோவை மாலை 7.30  மணி. மேற்கண்ட ரயில்களை கூலிபாளையம் ரயில்நிலையத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்வதாக கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் ஆ.சிகாமணி, வடக்கு ஒன்றியக் குழு உறுப்பினர் மகாலிங்கம், முன்னாள் ஒன்றி யச் செயலாளர் கே.பழனிசாமி உள்ளிட்டோர் உட னிருந்தனர்.