அவிநாசி, ஏப்.7- உயர்த்தப்பட்டுள்ள சொத்து வரியை குறைத்திடுமாறு திருமுருகன்பூண்டி நகரமன்ற கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். திருமுருகன்பூண்டி நகர்மன்ற கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சுப்பிரமணியம், தேவராஜன், பார்வதி ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில், உயர்த்தப்பட் டுள்ள சொத்து வரியை குறைக்க வேண்டும். திருப்பூர் மாந கராட்சியில் குடிநீர் கட்டணம் 70 ரூபாய் மட்டுமே, ஆனால் திருமுருகன்பூண்டி நகராட்சியில் 150 ரூபாய் வரை வசூ லிக்கப்படுகிறது. ஆகவே, இதனைக் குறைக்கக் வேண் டும். மேலும், முறைகேடான குடிநீர் இணைப்புகளை கண்ட றிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந் துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 22 ஆவது வார்டு பகுதியில் அமைந் துள்ள அரசுப்பள்ளியில் தரைமட்ட தொட்டி அமைத்து தர வேண்டும். பொதுக் கழிப்பிடத்தை சீரமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்திப் பேசினர்.