தருமபுரி, ஜன.15- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், காட்டேரி ஊராட்சிக்குட்பட்ட தாத னூர் பகுதி தலித் மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்தி தரக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இக்கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் ஊத்தங் கரை ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து ரூ.2.5 லட்சத்தில், காட்டேரி நரி குறவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள உயர் நீர்தேக்க தொட்டியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டது. இதன்மூலம் தலித் மக்க ளுக்கு குடிநீர் விநியோகிக்கும் பணியை மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றிய கவுன்சிலர் வி.கோவிந்தசாமி துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குமார், துணை தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.