அவிநாசி,ஜன.21 அவிநாசி அருகே ஆட்டையம்பாளையம் பகுதியில் விசைத்தறி போராட்டத்திற்கு தீர்வு காண கோரி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் பிரச்சார இயக் கம் மேற்கொண்டனர். ஜவுளி உற்பத்தியா ளர்கள் ஏற்றுக் கொண்ட ஒப்பந்த கூலியை அமல்படுத்த கோரியும், லட்சக்கணக்கான தொழிலாளர் கள் குடும்பங்கள் வேலை இழந்து தவிப் பதை தடுத்து நிறுத்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையத்தில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. இந்த தெரு முனை பிரச்சார இயக்கத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சாமியப்பன் தலைமை வகித்தார். இதில் விசைத்தறி தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பி னர் வெங்கடாசலம், பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சண்முகம், கருப்பு சாமி, விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் குட்டி (எ) மோகனசுந் தரம், முருகன் உட்பட பல முன்னணி நிர் வாகிகள் கலந்து கொண்டனர்.