ஈரோடு, மே 21- கீழ்பவானி திட்டத்தின் கீழ், வாய்க்கால் பகுதிகள் புனரமைப்பு மேற்கொள் வது குறித்து கீழ்பவானி முறைநீர் பாசன கூட்ட மைப்பு மற்றும் ஆயக்கட்டு விவசாயிகளுடனான கருத் துக்கேட்புக் கூட்டம் நடை பெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சி யரக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் ஹெச். கிருஷ்ணனுண்ணி முன்னிலையில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில், கீழ்பவானி திட்டத்தின் கீழ், வாய்க்கால் பகு திகள் புனரமைப்பு மேற்கொள்வது குறித்து கீழ்பவானி முறைநீர் பாசன கூட்டமைப்பு மற்றும் ஆயக்கட்டு விவசாயிகளுடனான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் சு.முத்துசாமி பின்னர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது, கீழ்பவானி வாய்க் கால் தண்ணீர் விவசாயத்திற்கு முழுமையா கப் பயன்படுகின்ற வகையில், பல்வேறு நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகி றது. கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் பக் கசுவர் கட்டவேண்டும் என்று ஒரு அணி யினரும், கட்டக்கூடாது என்று ஒரு அணியின ரும் கூறுகின்றார்கள். எனவே, அவர்களிடத் தில் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்ற வகையில், முதற்கட்டமாக கான்கிரீட் போடக்கூடாது என்று சொல்லக்கூடிய விவ சாயிகளை அழைத்து கருத்து கேட்கப்பட் டது. இதில், பல்வேறுகருத்துக்கள் தெரிவிக் கப்பட்டது. மேலும், கான்கிரீட் போடவேண் டும் என்று கூறும் விவசாயிகளிடம் சூழ்நிலை யினை எடுத்து கூறி தெளிவுபடுத்தப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் துறைசெயலாளர் ஆகி யோரிடம் கலந்தாலோசித்தப் பிறகே முடிவு தெரியும். இதில், நியாயமான முடிவினை இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ள வேண் டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச. சந்தோஷினி சந்திரா, கீழ்பவானி வடிநில கோட்ட செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், விவசாயிகள் மற்றும் விவ சாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்ட னர்.