கோவை, மார்ச் 5- கோவையில் “கலைஞர் நூல கம்” அமைப்பது குறித்து பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அதிகாரிகளுடன் ஆய்வு மேற் கொண்டார். இந்த ஆய்வுக்கு பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர், மதுரையை போலவே கோவையி லும் கலைஞர் நூலகம் வேண்டும் என மக்கள் கேட்பதாக முதல்வரி டம் தெரிவித்தேன். அதன்படி, நிதி நிலை அறிக்கையில் கலைஞர் நூலகம் அமைக்க அறிவிக்கப்பட் டது. அந்த வகையில், கோவையில் எந்த இடத்தில் நூலகம் அமைக்க லாம் என அதிகாரிகளுடன் ஆய்வு செய்தேன். ரேஸ்கோர்ஸ் பகுதியில் 6 ஏக்கர் நிலமும், சிறைச்சாலை பகுதியில் 7 ஏக்கர் இடமும் உள்ளது. இரு வரைபடத்தையும் முதல்வரிடம் காட்டி, அவர் தேர்வு செய்யும் இடத் தில் கட்டுவோம் என்றார். பொதுப் பணித்துறை மீது இருக்கும் நம் பிக்கை காரணமாக 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் கட்டயமாக நூல கத்தை திறப்பேன் என முதல்வர் தெரிவித்து இருந்தார். நூலகம் மட்டுமல்ல, அறிவியல் தொடர்பா னவையும் இடம் பெற வேண்டும் என சொல்லி இருக்கிறார். மேலும், உக்கடம் மேம்பாலப் பணிகளை மார்ச் 30 தேதிக்குள் முடித்து விடுவ தாக, ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரி கள் சொல்லி இருக்கின்றனர். 2024 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் அவி னாசி சாலையில் நடைபெறும் பாலம் வேலையை முடித்து தரச் சொல்லி இருக்கின்றேன் என்றார். தொடர்ந்து, மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எய்ம்ஸ்-க்கு இணையாக கிண்டியில் 240 கோடியில் மருத்து வமனை கட்டி இருக்கின்றோம். எய்ம்ஸ் மருத்துவமனையில் இல் லாத விடயங்கள், கிண்டி மருத்துவ மனையில் இருக்கின்றது. அறிவித்து 13 மாத காலத்தில் திறத்து இருக்கின் றோம். பெரும் பலம் கொண்ட ஒன்றிய அரசு எய்ம்ஸ்யை கட்டி இருக்க முடியாதா? இப்போது அரசி யலுக்காக அதை செய்கின்றனர். அதுவும் கானல் நீராகவே இருந்து கொண்டு இருக்கின்றது என விமர் சித்தார். செய்தியாளர் சந்திப்பின் போது ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.