திருப்பூர், டிச.24- அண்ணல் அம்பேத்கரைப் பற்றி நாடாளுமன்றத்தில் தவறாக பேசிய அமித் ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு பதிவு செய்த பாஜகவை கண்டித்து செவ்வாயன்று திருப்பூரில் காங் கிரஸ் கட்சியினர் ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளு மன்ற கூட்டத்தொடரில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணல் அம்பேத்கரை பற்றி இழிவாக பேசியதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடு பட்டனர். இந்நிலையில், எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு பொய் வழக்கு பதிவு செய்துள்ளதை கண்டிக்கும் வகையிலும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரியும் திருப்பூர் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்தனர். இதைத்தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் அம்பேத்கர் சிலையிலிருந்து ஊர்வல மாக சென்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்த னர்.