districts

img

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் என்.சங்கரய்யா மறைவிற்கு இரங்கல்

ஈரோடு, நவ.20- விடுதலை போராட்ட வீரர், கம்யூ னிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலை வர் தோழர் என்.சங்கரய்யா படத் திறப்பு விழா ஈரோட்டில் நடைபெற் றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த தலைவரும், இந்திய விடு தலை போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யா கடந்த புதனன்று காலமானார். இவரது மறைவிற்கு அனைத்துக்கட்சி தலைவர்கள் இரங் கல்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில், தோழர் சங்கரய்யா வின் படத்திறப்பு மற்றும் நினைவேந் தல் கூட்டம் ஈரோடு மூலப்பாளையம் என்.ஆர்.திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் ஆர்.ரகுராமன் தலைமை வகித் தார். தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற் றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி, தோழர் சங்கரய்யா படத்தை திறந்து வைத்து, இரங்கல் உரையாற்றினார். ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மாநிலங்களவை உறுப்பினர் அந்தி யூர் செல்வராஜ், முன்னாள் நாடாளு மன்ற உறுப்பினர் கந்தசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துளசிமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சாதிக், காங்கிரஸ் கட்சியின் ஜாபர் சாதிக்,  மனிதநேய மக்கள் கட்சியின் சித்திக், திராவிடர் கழகத்தின் சண்முகம் மற் றும் பொல்லான் பேரவை வடிவேல்  ராமன் ஆகியோர் இரங்கல் உரை யாற்றினர். இதில் திமுக மாநகரச் செயலாளர் மு.சுப்ரமணியன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபா கரன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி களின் நிர்வாகிகளும், உறுப்பினர்க ளும் திரளாக கலந்து கொண்டனர். மாணவர் சங்கம் அஞ்சலி தகைசால் தமிழர் விருது பெற்ற தோழர் என்.சங்கரய்யா, மாணவர் இயக்கத்தின் முதல் மாநிலத் தலை வராக செயல்பட்டார். அவரது மறை விற்கு இந்திய மாணவர் சங்கத்தினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்ற னர். அதன்ஒருபகுதியாக, இந்திய மாணவர் சங்கத்தின் சேலம் மாவட் டக்குழு சார்பில், சேலம் அரசு இரு பாலர் கலைக்கல்லூரி முன்பு இரங் கல் கூட்டம் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு மாணவர் சங்க மாவட் டக்குழு உறுப்பினர் கோகுல் தலைமை வகித்தார். கல்லூரி கிளை துணைச் செயலாளர் அபிராமி இரங்கல் உரை யாற்றினார். கிளை துணைத்தலை வர் நவீன் நன்றி கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர்.