விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி அனைத்துவகை தொழிலாளர் ஐக்கிய தொழிற்சங்கத்தின் சார்பில் திங்களன்று புன்செய் புளியம்பட்டி கணக்கரசம்பாளையத்தில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சங்கத்தலைவர் டி.சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்க மூத்த தலைவர் கே.துரைராஜ் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.