அவிநாசி, டிச.28- அவிநாசி ஊராட்சி ஒன்றிய பகுதியில் நீரோடை யில் கழிவுகளை கொட்டி செல்லும் உணவக உரிமை யாளர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கவுன்சிலர் வலியுறுத்தியுள்ளார். திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் திங்களன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெகதீசன் தலை மையில் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் பி.முத்துசாமி பேசுகையில், எனது வார்டு பகுதியில் அண் மையில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் போடப்பட்ட சாலைகளில் குடிதண்ணீர் குழாய் பதிப்பதற்காக சிதலம் ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் எதிர்காலத்தில் வாகன ஓட்டிகள் சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், அவிநாசி பகுதியிலுள்ள ரெஸ் டாரன்ட் உணவக உரிமையாளர்கள் இறைச் சிக் கழிவுகளை நீரோடை பாதையில் கொட் டிச் செல்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது என தெரிவித்தார். அப்போது, இப்பிரச்ச னைகள் குறித்து விரைவில் உரிய தீர்வு காணப்படும் என ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் ஜெகதீசன் உறுதியளித்தார்.