கோவை, ஜூலை 24- பட்டியலின மக்களின் உரிமைக்காக குரல் கொடுத் ததால் சாதி ஆதிக்கவாதிகளால் படுகொலை செய்யப் பட்ட செங்கொடி இயக்கத்தோழன் சீரபாளையம் ராக்கி யண்ணனின் நினைவு தினம் புதனன்று அனுசரிக்கப்பட் டது. ஆதிக்க சாதியில் பிறந்த தியாகி தோழர் ராக்கி யண்ணன், கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, பட்டி யலின உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். சாதி ஆதிக்கவாதிகளின் அதிகாரம் தோழர் ராக்கியண்ணன் செயல்களால் பறிபோவதை கண்டு ஆதிக்கசாதியினர் ஆத்திரமடைந்தனர். இதனைய டுத்து, சாதி ஆதிக்கவாதிகளால் தோழர் ராக்கியண் ணன் படுகொலை செய்யப்பட்டார். அவரது தியா கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி இணைந்து ராக்கியண்ணன் நினைவுதி னத்தை அனுசரித்து வருகிறது. இதன்ஒருபகுதியாக, கோவை மதுக்கரை தாலுகா, சீரபாளையம் பகுதியில் தியாகி சீரபாளையம் ராக்கி யண்ணன் நினைவு மேடையில் 68 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சிபிஎம், சிபிஐ மற்றும் கோவை மாவட்ட சிமெண்ட் அண்டு பொது தொழிலா ளர் சங்கம், சிஐடியு டி.பாலன் இன்ஜினியரிங் சங்கம் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்று தியாகி ராக்கியண்ணன் குறித்த நினைவுகளை பகிர்ந்தனர். இத னைத்தொடர்ந்து, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில், சிபிஎம் கோவை மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் யு.கே.சிவஞானம், வி.ஆர்.பழனிச் சாமி, சிபிஎம் மதுக்கரை ஒன்றியச் செயலாளர் எம். பஞ்சலிங்கம், தெற்கு நகரச் செயலாளர் நாகேந்தி ரன், விச மாவட்டத் தலைவர் வி.பி.இளங்கோவன் மற் றும் நிர்வாகிகள் கே.ஐய்யாசாமி, எஸ்.சி.சண்முகம், மற் றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொரு ளாளர் எம்.ஆறுமுகம், மதுக்கரை ஒன்றியச் செயலாளர் ஜி.பி.சக்திவேல், மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்தி ரன் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.