தருமபுரி, ஜூலை 29- தருமபுரி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவல கத்தில் ஓய்வுபெற்றோருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. தருமபுரி சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவல கத்தில் சுகாதார கல்வியாளராக பணியாற்றிய பி.ரங்கராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றிய ஜம்பு லிங்கம் ஆகியோர் ஓய்வுபெற்றனர். இவர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா தருமபுரி சுகாதாரபணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சுகாதாரபணிகள் துணை இயக்குநர் மருத்துவர் சவுண்டம் மாள் தலைமை வகித்தார். மருத்துவர்கள் தீபா, அனிதா, மாவட்ட மலேரியா அலுவ லர் சுப்பிரமணி, என்சிடி துணை இயக்குநர் மருத்துவர் பாலசுப்பிரமணி, சுகாதார ஆய்வாளர் சங்க மண்டசெயலாளர் யாரப்பாஷா, சுகாதார ஆய்வாளர் சரவணன், கண்காணிப்பா ளர் விண்செண்ட், உதவியாளர் உத்தமன் ஆகியோர் பேசி னர். இறுதியாக பணி ஓய்வு பெற்ற சுகாதார கல்வியாளர் பி. ரங்கராஜன், வட்டார சுகாதார மேற்பார்யாளர் ஜம்புலிங்கம் ஆகியோர் ஏற்புறையாற்றினர். இறுதியில் சுகாதார ஆய்வா ளர் சுதாகர் நன்றி கூறினார்.