districts

img

பராமரிப்பு மேற்கொண்ட பணிக்கு நிதி தராமல் இழுத்தடிப்பு சமத்துவபுரம் மக்கள் ஆட்சியரிடம் புகார்

தருமபுரி, ஜூலை 17- பெரியம்பட்டி சமத்துவபுரத்தில் உள்ள பழுதடைந்த வீடுகளை பராமரிப்பு செய்த பிறகு நிதி அளிக்காமல் இழுத்த டிப்பதாக சம்பந்தப்பட்ட மக்கள் தரும புரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் அளித்த மனு வில் தெரிவித்திருப்பதாவது, தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரி யாம்பட்டி சமத்துவபுரத்தில்  95 வீடுகள்  உள்ளன. 2000 ஆம் ஆண்டு கட்டிக் கொடுக்கப்பட்ட இந்த சமத்துவபுர வீடு கள் மேற்கூரை பழுதடைந்துள்ளது. மழைகாலங்களில் மேற்கூரையின் வழி யாக தண்ணீர் வீட்டிற்குள் செல்கிறது. சில வீடுகள் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, வீடுகளை பழுதுநீக்க கோரி  அதிகாரிகளிடம் நாங்கள் முறையிட் டோம். அதன் அடிப்படையில் வீட்டின் பயனாளிகலே பழுதுநீக்கி கொள்ளவும், அதற்கான தொகையை வழங்கப்படும் என உத்தரவு நகல் வழங்கப்பட்டது. அதன்படி, பராமரிப்பு பணியை முடித்து விட்ட பயனாளிகள் காரிமங்க லம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பணிக்கான தொகையையை கேட்க சென்றோம். அப்போது, நீங்கள் கழிப் பறை கட்டினால் தான் பாரமரிப்பு தொகை வழங்குவோம் என அலுவலர் கள் தெரிவித்தனர். ஏழ்மையில் வாழும்  எங்களுக்கு கழிப்பறை கட்ட பணம்  இல்லை. ஆகவே, வீடு பராமரிப்பு   வேலைசெய்து முடித்த பயனாளிகளுக் கான முழு தொகையை அரசு உடனே  வழங்கவேண்டும். மேலும், அப்பகுதி யில் உள்ள வீடுகளுக்கு கழிப்பறை வச திகள் செய்துதரப்பட வேண்டும். இதற் கிடையே பெரியாம்பட்டி ஊராட்சி மன்ற  தலைவர் ஜெயலட்சுமியின் கணவர் சங் கர் சமத்துவ வீடு பராமரிப்பு பணியை என்னிடம் விடுங்கள் என்று கேட்டார். நாங்களே பராமரிப்பு பணியை செய்கி றோம் என கூறிவிட்டோம். இதனால், கோபமடைந்த அவர், நூறுநாள் வேலைத்திட்டத்தில் வேலைதர மறுக் கிறார். மேலும், ஊராட்சி மன்ற தலைவ ரின் கணவரின் தலையீடு, மிரட்டல் அதிகமாக உள்ளதால், அவரின்  அத்து மீறும் செயலை தடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.