குட்கா பொருட்கள் பறிமுதல்
தருமபுரி, செப்.12- தருமபுரி வழியாக கடத்தி வரப்பட்ட 750 கிலோ குட்கா பொருட்களை காவல் துறையினர் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்திலிருந்து தருமபுரி வழியாக தமிழ் நாட்டிற்கு அடிக்கடி தடை செய்யப்பட்ட புகையிலை பொருட் கள் ரயில் மற்றும் பேருந்து, சரக்கு வாகனங்களில் கடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதத்திற்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து, மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளில் தீவிர வாகன சோதனை யில் ஈடுபட்டு, குட்கா கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், மதிக்கோன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் கோபி தலைமையிலான போலீசார், திங்களன்று குண்டல்பட்டியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது அவ்வழியாக சரக்கு வேன் ஒன்று வேகமாக வந்தது. அதனை போலீசார் வழிமறித்து சோதனை செய்த தில், பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் சிவக்குமார் (30), கிருஷ்ணகிரியைச் சேர்ந்த குமார் (35) ஆகிய 2 பேர், சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை மூட்டை, மூட்டையாக கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து சரக்கு வேன், 750 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், போலீசார் கைதான 2 பேரிடமும் தீவிர விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தீப்பிடித்து எரிந்த கார் தற்செயலா?, சதியா?
கோவை, செப்.12- கோவையில் மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது புகார் அளித்திருந்த சரண்யா என்ற பெண்ணின் கார் செவ்வா யன்று பிற்பகலில் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். கோவை - மணியக்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரண்யா. இவர் மேயர் கல்பனா மற்றும் அவரது குடும்பத் தினர் தங்கி இருக்கும் வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வரு கிறார். இந்நிலையில், தன்னை எதிர் வீட்டில் இருந்து காலி செய்ய வைக்க மேயர் குடும்பத்தினர் தொல்லை கொடுப்ப தாக காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் சரண்யாவின் கார் செவ்வாயன்று பிற் பகலில் தீ பிடித்து எரிந்தது. இதில், காரின் ஒரு பகுதி தீயில் சேதமடைந்தது. இதுகுறித்து காவல்துறையில், சரண்யா புகார் அளித்தார். புகாரின் பேரில் கோவை மாநகர போலீ சாரும், தடயவியல் துறையினரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சரண்யாவிடம் புகார் மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். காரின் மீது கவர் போடப்பட்டிருந்த நிலையில், கவரில் பற்றிய தீ காரின் ஒரு பகுதியை சேதமாக்கி இருப்பதும் தெரிய வந்தது. இது திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டதாதா? அல்லது தற் செயலாக நடந்ததா? என துடியலூர் போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவில் பல்லி: இருவருக்கு வாந்தி, மயக்கம்
கோவை, செப்.12- கோவை அருகில் தனியார் உணவகத்தில் வாங்கிய பார்சல் உணவை சாப்பிட்டவர் களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், அன்னூர் பகுதியை சேர்ந்தவர் சாகுல். இவரது நண்பர் அப்துல் ஹலீம். செவ்வாயன்று, அன்னூர்- கோவை சாலையில் உள்ள தனியார் உணவகத் திற்கு சாகுல் சென்று சாப்பிட்டு விட்டு நண்ப ருக்கு பார்சலில் தோசை வாங்கியுள்ளார். அந்த தோசையை நண்பன் சாப்பிட்டுள் ளார். அப்துல் ஹாலீம் முதல் தோசை சாப்பிட்டு முடித்த பின்னர் சாம்பாரை ஊற்றிய போது அதில் பல்லி இறந்த நிலையில் கிடந் ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும், பல்லி விழுந்த சாம்பாரை சாப் பிட்ட அப்துல் ஹலீம் மற்றும் சாகுல் இருவ ருக்கும் திடீரென வாந்தி, மயக்கம் மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் அன்னூர் அரசு மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து அன்னூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன் ஒரு வார காலத்திற்கு கடை நடத்த தடை விதித்துள்ளார்.
ரேலியா அணையில் விரிசல்: சரி செய்ய கோரிக்கை
உதகை, செப்.12- குன்னூரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக இருந்து வரும் ரேலியா அணையில் சிறிய விரிசல் ஏற்பட்டு, தண்ணீர் கசிந்து வருகிறது. இதனை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 வார்டுகளுக்கு நீராதாரமாக ரேலியா அணை விளங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அப் போதைய குன்னூர் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு இந்த அணை கட்டப்பட்டது. 43.7 அடி கொள்ளளவில் கடந்த 1941ஆம் ஆண்டு ரேலியா அணை திறக்கப்பட்டது. இந்த அணையில் இருந்தே குன்னூர் நகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நல்ல மழை பெய்து வந்தது. இதனால் ரேலியா அணை தற்போது 41 அடி நிரம்பி ரம்மியமாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில், அணையின் தடுப்பில் இருந்து சிறிய விரிசல் ஏற்பட்டு அதன் வழியே தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளது. அணை நிரம்பியுள்ளதால் தொடர்ந்து தண்ணீர் கசிவு ஏற்பட்டு வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டிய அணை என்பதால் அதிகாரிகள் உடனடியாக பார்வையிட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திம்பத்தில் விபத்து
ஈரோடு, செப்.12- திம்பம் மலைப்பாதை யில் சரக்கு வேன் கவிழ்ந்த தால் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. கர்நாடக மாநிலம், சாம் ராஜ் நகரிலிருந்து ஈரோட் டிற்கு தக்காளி பாரம் ஏற்றிய சரக்கு வேன் ஒன்று புறப் பட்டது. இந்த சரக்கு வேன் திங்களன்று இரவு திம்பம் மலைப்பாதையின் 8 ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்துக் குள்ளானது. இதில் சரக்கு வேனை ஓட்டி வந்த ஓட்டு நர் காயமின்றி உயிர் தப்பி னார். இவ்விபத்தில் சரக்கு வேனில் இருந்த தக்காளி அனைத்தும் சாலையில் சிதறியது. இந்த விபத்து காரண மாக திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், வாக னங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதை யடுத்து ஆசனூர் போலீ சார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்கு வரத்தை சீரமைக்கும் பணி யில் ஈடுபட்டனர்.
காவல் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம்
கோவை, செப்.12- மேற்கு மண்டல காவல்துறையில் மேற் கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணி கள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமை யிலான 5ஆவது காவல் ஆணையத்தின் கலந்தாய்வுக் கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமை யில், கலந்தாய்வுக் கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர் அலாவுதீன் மற்றும் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குநர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்தக் கூட்டத்தில் காவல்துறையில் பணி நியமனம், ஊதியம், பணிகளுக்கான நெறிமுறை, மன அழுத்தம் ஆகியவை குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இதில், 8 மாவட்ட ஆட்சியர்கள், மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். கோவை அரசு மருத்துவமனை தலைவர் நிர்மலா, மருத்துவத்துறை அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்களும் இந்த ஆலோ சனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கலந்தாய்வு கூட்டத்தில். காவலர் - பொதுமக்களுக்கு இடையேயான உறவை மேம்படுத்தவது, காவல்துறை பணியாளர் களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்து வது, பணியிடங்கள், மற்றும் புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரை செய்வது போன்ற ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இளம் பெண் தற்கொலை – விசாரணைக்கு ஆர்டிஓ உத்தரவு
நாமக்கல், செப்.12- குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை கொண்டார். இது குறித்து, வட்டாட்சியர் தலைமையில் விசார ணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் முருகன் (26). இவர் வழக்கறிஞருக்கு உதவியாள ராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி துர்கா (24). மூன்று ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் செய்துள்ளனர். துர்கா ஈரோட்டில் உள்ள தனியார் ஜவுளி கடையில் பணியாற்றி வருகிறார். இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இவர்க ளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த தாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்ப வத்தன்று ஏற்பட்ட தகராறில், துர்கா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து தகவலறிந்த பள்ளி பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை அரசு மருத்துவமனையில் உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், திருமணமாகி 3 ஆண்டுகளே ஆனதால் வட்டாட்சியர் விசாரணைக்கு உத்தர விட்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை
நாமக்கல், செப்.12- பள்ளிபாளையம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், வெப்படை அடுத்துள்ள பாதரை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 20 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகாரின் அடிப்படையில், இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அண்ணாமலை என்பவரை வெப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர், குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
தொடரும் அலட்சியம்: தெக்கலூரில் தனியார் பேருந்து சிறைப்பிடிப்பு
அவிநாசி, செப்.12- கோவை செல்லும் வழியில் கல்லூரி மாணவனை பாதி வழியில் இறக்கி விட்ட தனியார் பேருந்தை தெக்கலூரில் திங்க ளன்று இரவு சிறைப்பிடித்தனர். தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் கிஷோர். கல்லூரி மாணவனான இவர், கோவை சித்ரா பேருந்து நிறுத் தத்தில் இருந்து தெக்கலூர் வழியாக திருப்பூர் நோக்கி செல் லும் பேருந்தில் திங்களன்று மாலை ஏறியுள்ளார். பேருந்தின் நடத்துநர், தெக்கலூர் செல்லாது புறவழிச்சாலை வழியாகத் தான் பேருந்து செல்லும் எனக்கூறி கல்லூரி மாணவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நீலம்பூரில் இறக்கிவிட்டுச் சென் றுள்ளார். இதையறிந்த தெக்கலூர் பகுதி மக்கள், திங்களன்று இரவு தெக்கலூர் வழியாக வந்த அந்த தனியார் பேருந்தை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம் பவ இடத்துக்கு வந்த அவிநாசி போலீஸார், பேருந்தை பறிமு தல் செய்து காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். இது குறித்து செவ்வாயன்று காலை உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு தெக்கலூர் செல்லாது எனக் கூறி, பேருந்தில் இருந்து அவசரகதியில் இறக்கி விடப்பட்ட பெண், அதே பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மக்கள் போராட்டம் நடத்திய நிலையில், பேருந்துகள் தெக்கலூர் வந்து செல்லும் வகையில் இயக்கப்பட்டன. ஆனால் மீண்டும் இப்பிரச்சனை தொடர்வதால் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
பெண்ணிடம் நகை வழிப்பறி: 3 சிறுவர்கள் கைது
அவிநாசி, செப்.12 - பெருமாநல்லூரில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் ணிடம் நகை பறித்த வழக்கில் தொடர்புடைய 3 சிறுவர்களை திங்களன்று போலீசார் கைது செய்தனர். பெருமாநல்லூர் அவிநாசியப்பன்நகரைச் சேர்ந்தவர் ராம சாமி மனைவி சுப்புலட்சுமி (55). கடந்த 2ஆம் தேதி காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்து, சுப்புலட்சுமி அளித்த புகாரின் பேரில் பெரு மாநல்லூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தனிப் படையினர் அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பதிவான சிசி டிவி காட்சிப்பதிவுகளை வைத்து தொடர்புடையவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி, பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது நயினார் மகன் ஷேக் மைதீன் (19) மற்றும் 2 இளம் சிறார்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 5 பவுன் சங்கிலி, வழிப் பறிக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவை பறிமு தல் செய்யப்பட்டது.
உடுமலை நகராட்சி எல்லையை விரிவுபடுத்த மக்கள் கோரிக்கை
உடுமலை, செப்.12 - உடுமலை நகராட்சியின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று நகர்மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நூற்றாண்டு பெருமை கொண்ட உடுமலைப்பேட்டை நக ராட்சியை தரம் உயர்த்தும் வகையிலும், மக்களுக்கு நலத்திட் டங்களை எளிதில் கொண்டு செல்லும் வகையிலும் எல்லை களை விரிவாக்கம் செய்ய வேண்டும். உடுமலை நகராட்சி தற்பொழுது 7.41 சதுர கிலோமிட்டரில் சுமார் 80 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஆனால் நகராட்சியில் 33 வார்டுகள் மட்டுமே உள்ளன. இந்த நகராட்சியின் எல்லைப் பகுதியில் இருக்கும் கிராம ஊராட்சிகளான கணக்கம்பாளையம், பெரிய கோட்டை, போடிபட்டி, சின்னவீரம்பட்டி, கணபதிபாளையம், ராகல்பாவி, கண்ணமநாயக்கனூர் மற்றும் பூலாங்கிணறு ஆகிய பெரிய ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்தால் சுமார் 91.17 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய நகராட்சியாக மாற்றம் அடையும். இந்த ஊராட்சிகளில் அதிக வருவாய் மற்றும் குடிநீர் வசதி, சாலை போக்குவரத்து திட்டங் களில் தன்னிறைவு என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன. இதுபோன்ற அனைத்து வசதிகள் கொண்ட ஊராட்சி கள் நகர எல்லைகளில் இருப்பதால், நகராட்சியுடன் இணைத் தால் மக்களின் தரம் சிறந்த முறையில் இருக்கும்.
அமராவதி அணை நீர்மட்டம்: 60.21/90அடி நீர்வரத்து:256கனஅடி வெளியேற்றம்:256கனஅடி
உடுமலை, செப். 12 - உடுமலை இலக்கியக் களத்தின் ஆவணித் திங்கள் இலக் கிய நிகழ்வு உடுமலைப்பேட்டை பசுபதிவீதியில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. சாகித்திய அகாதமி விருது பெற்ற மின்சாரப்பூ சிறுகதை தொகுப்பு நூல் மதிப்பாய்வு செய்யப்பட்டது. ஆசிரியர் இளையவன் சிவா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார். எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் சாகித்ய அகாதமி விருது பெற்ற “மின்சாரப் பூ” என்ற சிறுகதை தொகுப்பு நூலை பட்டி மன்ற பேச்சாளர் சுடர் மதிப்பாய்வு செய்து உரை நிகழ்த்தினார். சாதிய கொடுமைகள் இன்றைக்கும் மாணவர்களிடத்தில், குறிப்பாக நாங்குநேரியில் நிகழ்ந்ததை ஒப்பிட்டு காட்டி இந்த கொடூர மனப்பான்மை எப்படி இந்திய மக்கள் சமுதா யத்தில் புகுந்தது? இந்திய மக்கள் மனங்களில் இருந்து எப்படி அகற்றுவது என்றும் வேதனையோடு கருத்துக்களை தெரி வித்தார். அதன்பின் சேலம் துணை ஆட்சியரும், எழுத்தாளருமான பிரேமலதா பெரியசாமியின் செதுக்கல்கள் என்னும் கவிதை நூலை அரசு கல்லூரி முனைவர் பட்ட ஆய்வு மாணவர் போகராஜ் எடுத்துரைத்தார். இந்த இலக்கிய நிகழ்ச்சியில் அரசுக் கல்லூரி பேராசிரி யர் முனைவர் வேலுமணி, கவிஞர் சோலை மாயவன், தோழன் ராஜா, மடத்துக்குளம் பன்னீர்செல்வம், சதீஷ் குமார் உள்பட அரசுக் கல்லூரி மாணாவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் செல்லத்துரை நன்றி கூறினார்.
பாஜகவினர் 267 பேர் மீது வழக்குப் பதிவு
திருப்பூர், செப். 12 - திருப்பூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் உருவபொம்மையை எரித்து தடையை மீறி போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்சி யினர் 267 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்ற தமுஎகச சனா தன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உத யநிதி ஸ்டாலினின் கருத்தைத் திரித்து நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் அரிசிக் கடை வீதியில் உள்ள இந்து சமய அறநி லையத் துறை அலுவலகம் அருகே தடையை மீறி பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அக்கட்சியின் மாநிலப் பொருளா ளர் எஸ்.ஆர்.சேகர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டா லின் உருவ பொம்மையை எரித்தனர். இதை யடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவி னரை காவல் துறையினர் கைது செய்தனர். திங்களன்று திருப்பூர் இந்து சமய அற நிலையத்துறை அலுவலகம் முன்பாக இப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 267 பேர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தாக திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதானம் இழந்த ஆளுநர்கள்: அமைச்சர் தாக்கு
திருப்பூர், செப். 12 - பாஜக ஆட்சி இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் நிதானம் இழந்து செயல்படுகின் றனர். இந்த ஆளுநர்கள் போட்டி போட்டு அர சியல் பேசுகின்றனர். என்று அமைச்சர் மு.பெ. சாமிநாதன் குற்றஞ்சாட்டினார். திருப்பூர் கலைஞர் அறிவாலயத்தில் செவ்வாயன்று செய்தியாளர்களுக்குப் பேட் டியளித்த அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறி யதாவது: நடுநிலையாக செயல்பட வேண் டிய ஆளுநர்கள் அரசியல் பேசுவது கண்ட னத்திற்குரியது. ஆ.ராசா சனாதனம் குறித்து விவாதத்திற்கு அழைத்ததற்கு தமிழிசை சௌந்தர்ராஜன் பதில் அளித்திருப்பது அவர் அரசியல் பேசுவதற்கு உதாரணம். அவரது பேச்சு கண்டனத்திற்கு உரியது. பாஜக ஆட்சி யில் இல்லாத மாநிலங்களின் ஆளுநர்கள் நிதானம் இழந்து செயல்படுகின்றனர். அர சியல் பேசுவதற்கு அவர்களுக்குள் போட்டி போடுகின்றனர். அரசியல் கட்சியில் தலைவர்களுக்கு கருத்துரிமை உண்டு. கருத்துக்கு பதில் சொல் வதற்கு மாறாக, உருவ பொம்மையை எரிப் பது, தலையை சீவி விடுவேன் என மிரட்டு வது கண்டனத்திற்குரியது. காட்டுமிராண்டித் தனமானது. இது போன்ற மிரட்டல்களுக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது என்று அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
நீதிமன்றத்திற்கு வந்தவர்களை வெட்டிய கும்பல் அரிவாளோடு துரத்தி சென்றதால் பரபரப்பு
கோவை, செப்.12- நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வந்தவர்களை அடையா ளம் தெரியாத நபர்கள் விரட்டி சென்று அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பெண் வன்கொடுமை வழக்கில் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித், சைமன் மற்றும் சரவணம்பட்டி பகு தியைச் சேர்ந்த ரித்திஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசார ணைக்காக கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகிய மூன்று பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டி ருந்தனர். இதனிடையே, மூவரையும் பின்தொடர்ந்த கும்பல், காட்டூர் பகுதிக்குள் நுழைந்தும், ராம்நகர் பகுதியில் வழி மறித்து, தாங்கள் வைத்திருந்த அரிவால் மற்றும் கத்தி போன்ற ஆயுதங்களால் சரமாரியாக வெட்ட துவங்கியுள்ளனர். இதையடுத்து, ரஞ்சித் மற்றும் சைமன் ஆகியோர் ஓடினர். இதனையடுத்து, பயங்கர ஆயுதங்களோடு வந்த கும்பல் கூட்டம் திரள்வதை கண்டதும், தப்பி ஓடினர். இதில், காயம டைந்த இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இச் சம்பவம் கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி உள் ளது. இதற்கிடையில், போலீசார் நடத்திய முதற்கட்ட விசார ணையில் வெட்டிய கும்பலை அடையாளம் காண்டுள்ளனர். முன்விரோதம் காரணமாக கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவரும், ஏற்கனவே பல வழக்குகளில் தொடர்புடைய வருமான ரவி என தெரியவருகிறது. இதைதொடர்ந்து காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வரு கின்றனர்.
புகார் மீது நடவடிக்கை இல்லை தீக்குளிக்க முயன்ற குடும்பத்தினர்
தருமபுரி, செப்.12- தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே தாளநத்தம் கிரா மத்திற்குட்பட்ட டி. அய்யம்பட்டி கிராமத்தை சேர்ந்த சீனு (48). இவர்களுக்கு சொந்தமான பூர்வீக நிலம் 1.40 ஏக்கர் விளை நிலம் உள்ளது. இதனை, இவர்களது உறவினர்கள் சிலர் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அபகரிக்க முயன்று வரு வதாகவும், இதுதொடர்பாக கடத்தூர் காவல்துறையில் புக ராளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி, சீனு இவரது தாய் மற்றும் மனைவி மகள் ஆகியோர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக் குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவ லர்கள் துரிதமாக செயல்பட்டு தீ்க்குளி்க்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து, மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
டால்பின்நோஸ் காட்சிமுனை பகுதியிலுள்ள கடைகளை அகற்ற வனத்துறை நோட்டீஸ்
உதகை, செப்.12- நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள லேம்ஸ் ராக் மற்றும் டால்பின்நோஸ் காட்சிமுனை குன்னூர் வனத் துறைக்கு சொந்தமானது. குன்னூரில் உள்ள முக்கிய சுற்று லாத் தளங்களாக கருதப்படும் லேம்ஸ்ராக் மற்றும் டால்பின் நோஸ் காட்சிமுனைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக 25க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடைகள் வைத்து, வாழ்கை நடத்தி வருகின்றனர். இதனிடையே வனத்துறைக்கு சொந்த மான இடத்தை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ள தாக, குன்னூர் வனத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தனர். இந்நிலையில், குன்னூர் வனத்துறையினர் ஆக்கிரமிப்பு கடை களை அப்புறப்படுத்தவும், லேம்ஸ் ராக் மற்றும் டால்பின் நோஸ் பகுதியிலுள்ள கடைகளை காலி செய்ய நோட்டீஸ் வழங்கியுள்ளனர். அதேபோல, குன்னூர் நெடுஞ்சாலைத் துறையினரும் டால்பின்நோஸ் பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளை அப்புறப்படுத்த நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இது தொடர்பாக வருவாய்த்துறையினர் மூலம் நில அளவீடு செய்து, வரக்கூடிய நாட்களில் கடைகளை அப்புறப்படுத்த அனைத்துத்துறை அதிகாரிகள் இணைந்து திட்டமிட்டுள்ள னர். இதனால் அப்பகுதியில் கடைகள் வைத்துள்ள வியாபாரி கள் செய்வதறியாமல் திணறி வருகின்றனர்.
நூல் அனுப்புவதாக ரூ.18.50 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்குப்பதிவு
கோவை, செப்.12- மும்பையை சேர்ந்தவர் பாரேக். இவர் டெக்ஸ்டைல் தொழில் செய்து வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையைச் சேர்ந்த ரமேஷ், காஜா உசேன் ஆகியோரிடம், நூல் அனுப்ப சொல்லி ரூ.18.50 லட்சத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்தி யதாக தெரிகிறது. ஆனால், பணத்தை பெற்று கொண்டு இருவரும் நூல் அனுப் பாமல் காலம் தாழ்த்தி வந்தனர். இதை யடுத்து பாரேக் நூல் அனுப்பவில்லை என்றால் நான் கொடுத்த பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதையடுத்து, ரமேஷ் மற்றும் காஜா உசேன் ஆகியோர் காசோலையை பாரேக் கிற்கு அனுப்பி வைத்தனர். காசோ லையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதுகுறித்து பாரேக் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ரமேஷ் மற்றும் காஜா உசேன் மீது போலீசார், ஏமாற்றுதல் மற்றும் நம்பிக்கை மோசடி ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசா ரித்து வருகின்றனர்.
இன்று மின்தடை
சேலம், செப்.12- சேலம் மாவட்டம், சிங்க புரம் துணை மின் நிலையத் தில் புதனன்று (இன்று) பரா மரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சிங்க புரம், வாழப்பாடி, கொட்ட வாடி, துக்கியாம்பாளையம், அத்தனூர்பட்டி, பேளூர், முத் தம்பட்டி, மண்நாயக்கன் பட்டி, திம்மநாயக்கன்பட்டி, மேற்கு ராஜபாளையம், புதுப் பாளையம், பழனியாபுரம் உள் ளிட்ட பகுதிகளில் புதனன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர் மீது புகார்
ஈரோடு, செப்.12- பணியிட மாற்றம் செய்யப்பட்ட அரசுப்பள்ளி ஆசிரியர் மீது ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள் ளது. ஈரோடு மாவட்டம், சிங்காநல்லூரில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு கணித பட்டதாரி ஆசிரி யர் கே.எஸ்.சிவக்குமார் பணியாற்றி வந்தார். இவர் கடந்த பல வருடங்களாக சக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கடின வார்த்தைகளைப் பயன்படுத்தியும், மாணவர்களை அடித்துத் தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவர், சமூக வலைதளங் களில் பெண் ஆசிரியர்களின் புகைப்படங்களை பதிவிட்டு விமர்சனம் செய்து செய்துள்ளார். மேலும், மாணவர்களி டையே பிரிவினையை உண்டாக்கும் நடவடிக்கைகளில் ஈடு பட்டுள்ளார். சாதியைச் சொல்லி ஆசிரியர்களை திட்டியுள் ளார். இவரது நடவடிக்கையால் போதிய வகுப்பறை கட்டடம், அறிவியல் ஆய்வகம், நூலகம், கழிவறை உள்ளிட்டவை அமைக்கப்படவில்லை. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களின் கையொப்பங் களை போலியாக இவரே போட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கைகளால் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், முன்னாள் மாணவர்கள் அமைப்பு மற்றும் பெற்றோர்கள் இவர் மீது புகார் செய்தனர். இதையடுத்து அவர் பணிட மாற்றம் செய்யப்பட்டார். இந் நிலையில். இதே பள்ளியில் பணியாற்ற கே.எஸ்.சிவக் குமாரை அனுமதிக்கக்கூடாது என வலியுறுத்தி மேற்கண்ட அமைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
குடிநீர் கேட்டு விதொச மனு
ஈரோடு, செப். 12- எழுமாத்தூர் ஊராட்சி பகுதியில் சீரான குடிநீர் விநியோ கம் கேட்டு எழுமாத்தூர் ஊராட்சி மன்ற தலைவரிடம் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், எழுமாத்தூர் ஊராட்சியில் பொன்விழா நகர் உள்ளது. இங்குள்ள புதுகாலனியில் சுமார் 50 அருந்த தியர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முறையான குடிநீர் வசதி செய்து கொடுக்கப்படவில்லை. இத னால் பழைய காலனிக்குச் சென்று குடிநீர் எடுத்து வர வேண் டிய நிலை உள்ளது. ஆகையால் அப்பகுதி மக்கள் தாங்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், இதுகுறித்து உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் சங்க மொடக்குறிச்சி தாலுக்காச் செயலாளர் டி.தங்கவேல் தலைமை யில் மக்கள் ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்.